Thoughts - The fastest, the most beautiful and the most volatile. This blog is an attempt to capture some of them before they pass away.
ஞாயிறு, 27 ஜூலை, 2008
சிறு துளிகள்
பாண்டவர் கொண்டிட்ட பாத்திரம் போலே
என் மனமானது உன் வரவாலே
அட்சயமானது நீ அருகில் வந்ததும்
பிச்சயம் ஆனது பின் விலகிச் சென்றதும்
ஹீரோ
சினிமா ஒரு எதிர் வேள்வி
வரம் தரும் பக்தர்களாய் ரசிகர்கள்
நாலே படங்களில் நல்லவனாய் நடித்ததில் நான் கடவுள்
காதலி
நாளுக்கொரு ஆப்பிள் வேண்டாம்,
உன் பார்வைகளால் என் ஆயுள் நீளும்
வெயிலுக்கு இனி பழ ரசம் வேண்டாம்
உன் புன்னகையால் என் தாகம் தீரும்
கடவுள்
கடவுள் - வயது அதை விட சற்று குறைவு தான்
காட்டிலும் குகைகளிலும் வாழ்ந்த ஆதி மனிதனுக்கு ஒரு கடவுள் இருந்தான். இதோ, இன்று உயர் கட்டிடங்களில் கணிப்பொறியுடன் விளையாடிக் கொண்டிருக்கும் மனிதனுக்கும் ஒரு கடவுள் இருக்கிறான். இவ்விரு கடவுள்களுக்கும் , அந்த மனிதருக்குள் உள்ள நாகரிக வேற்றுமைகேற்ப தோற்ற வேறுபாடு மட்டுமே உள்ளது. கடவுள் பற்றி தவறாய் பேசுவதாய் நினைத்து யாரேனும் காயப் பட்டால் என் ஒவ்வொரு செல்களின் சார்பிலும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் . யாரேனும் கோபப் பட்டால் நிச்சயம் நான் உங்களை மன்னிக்கிறேன்.
கடவுள் இல்லை என்ற பிரச்சாரம் எனது கொள்கை அல்ல. மனிதம் மறந்து தனது கடவுளைப் பிரச்சாரம் செய்பவர்களுக்கான என் பரிதாபத்தின் வெளிப்பாடு தான் இது. மனிதனின் இத்தனை ஆண்டு கால பயணத்தில் அவனுக்கு நற்பண்புகள் சொல்லிக் கொடுத்ததில் நிச்சயம் அவன் நம்பும் அத்தனை கடவுள்களுக்கும் மதங்களுக்கும் நிறையவே பங்கு உள்ளது. ஆனால் அனைத்து மதங்களும் சொல்லியும் மனிதன் மறந்து போனது மனிதம் மட்டும்தான் . மதவாதிகளின் மதப் பிரசாரத்தில் பாவம் மறைந்து போனது இந்த மனிதம். ஒன்றாம் வகுப்பிற்கான அறிவு கூட இல்லாத ஒருவன் அறுவை சிகிச்சை செய்தால் விளையும் ஆபத்துதான் மனிதனை நேசிக்கும் பண்பு குறைந்த ஒருவன் கடவுளை நேசிப்பதால் விளையும்.
கடவுளை நம்பாத எவனும் கடவுளை நம்புபவனை கொலை செய்ததில்லை . கடவுளை நம்புபவர் தான் ஒருவரை ஒருவர் கொன்று கொள்கின்றனர் . 'யார் கடவுள்?' என்ற கேள்விக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் இரத்தத்தால் தான் பதில் எழுதப் பட்டுள்ளது. தனது கடவுளை மட்டும் நம்புபவன் கடவுளின் படைப்பாக கருதப் படும் மனிதனை நம்ப மறுக்கிறான். கடவுள்கள் இங்கே கொட்டிக் கிடக்கிறார்கள், கடவுள் தன்மை தான் காணாமல் போய் இருக்கிறது.
ரோடோரங்களில் சிங்கமும் மனிதனும் சிநேகமாய் இருப்பது போன்ற அட்டைப் படத்தோடு மதப் பிரச்சாரம் செய்யும் மனிதர்கள் எங்கும் காணலாம் . ஒரு சர்க்கஸ் விளம்பரதிர்கும் இதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. மத போதகர்கள் கவனம் ஈர்க்க தெரிந்தவர்கள் . சிங்கம் சைவம் ஆகி நம்மோடு சிநேகமாய் இருந்தால் அதோடு எடுத்துக் கொண்ட புகைப் படம் கழுவப் படும் முன்பே அது நம் வீட்டுக் குழம்பில் கொதித்துக் கொண்டிருக்கும். இவை எல்லாம் கடவுள் மனிதனுக்காக படைத்தது என்ற விளக்கத்தோடு நாம் சுவைத்துக் கொண்டு இருப்போம் .
தூணிலும் துரும்பிலும் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத கடவுளை நேசிக்கும் மனிதர்கள், சதையும் இரத்தமும் சேர்ந்து எதிரே நிற்கும் வேறு மத மனிதனை நேசிப்பதில் தயக்கம் காட்டுகிறார்கள். இங்கே உணவுப் பஞ்சத்தில் இறந்தவரை விட உணர்வுப் பஞ்சத்தில் இறந்தவரே அதிகம். மத போதனைகள் அத்தனையும் மனித போதனையாய் மாறி இருந்தால் அவர்களை காப்பாற்றி இருக்கலாம்.
நிச்சயம் கடவுளை மறந்ததால் இங்கே கொலைகள் பெருக வில்லை . போர் செய்யும் எந்த இரண்டு நாட்டுக்கும் ஏதாவது மதம் கண்டிப்பாய் இருக்கிறது. கொலை செய்பவனும் கடவுளை தொழுகிறான் , கொலை செய்ய படுபவனும் கடவுளை தொழுகிறான். சொல்லப் போனால் மனிதன் கடவுளை மறந்தால் இங்கே நடக்கும் கொலைகளில் ஒரு சதவிகிதமாவது குறையும் .
"எங்கள் கடவுளைக் கும்பிட்டால் வாழ்வில் இருக்கும் துயரம் மறையும். எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார். எங்கள் கடவுளை தொழுவதால் தான் மகிழ்ச்சியாய் இருக்கிறோம். " தன்னை வணங்குபவனை மட்டும் காக்க கடவுள் ஒன்றும் மனிதன் இல்லை. உங்கள் கடவுள் தான் உண்மையாகவே இருக்கட்டும், உங்களை காக்கும் உங்கள் கடவுளுக்கு உலகத்தையும், தன்னையும் தன் கொள்கைகளையும் காக்க தெரியும். முடிந்தால் நீங்கள் மனிதத்தை பிரச்சாரம் செய்யுங்கள் . வேண்டாம் வேண்டாம் , நீங்கள் சும்மா இருந்தாலே மனிதம் தன்னால் பிழைத்துக் கொள்ளும்.
காலமானி கனவுகள்..
பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...
-
தமி ழ்.. உலகோடு என்னை இணைத்துக்கொள்ள உதவிய முதல் பாலம். என்னை சேர்ந்த மனிதர்கள் தவிர நான் ஆழமாய் நேசிப்பதாய் உணர்ந்த முதல் உறவு.. ஆங்கிலம் வ...
-
Clasping the hands together, resting the forehead on them, closing the eyes so tightly making it difficult for every single photon to hit t...
-
மனித வெடி குண்டு ,,, இரக்கமற்ற அரக்கர்கள் எரிகிறது மனம் பதைபதைக்கிறேன் நான் கண் சிமிட்டி சிரிக்கிறது கையில் உள்ள சிகரெட் துண்டு ......