கைப்பை,திறன்பேசி எல்லாம் பாலித்தீன் கவரில் போட்டுவிட்டு, மழையில் நனைந்து கொண்டே நடந்தேன், எவ்வளவு சுகம், மழையில் நனையாதே என்று அம்மா சொன்னதை மீறி நனைந்ததே முதல் விதிமீறல், எனக்கென்னவோ மழையில் நனையாதே என்று சொல்வது தான் விதிமீறலாய் தெரிந்தது. பரிட்சைக்கு படி என்றார்கள், பிடித்ததை படித்தேன்..இழுத்து மூடு என்றார்கள், கண்ணை மூடிக்கொள் என்றேன்..ஒருவனே கற்பென்றார்கள், பரிணாம வளர்ச்சி படி என்றேன்..புல்லானாலும் புருஷன் என்றார்கள், புல்லை வெளியே வை என்றேன்.. வாழாவெட்டி ஆவாய் என்றார்கள், வாழ்வை வெட்டியாய் ஆக்க விருப்பமில்லை என்றேன்.. துணையில்லாமல் வாழ முடியாது என்றார்கள், துணை தான் தேவை தலைவன் இல்லை என்றேன்.. திமிர் பிடித்தவள் தனியாக தான் இருக்க போகிறாய் என்றார்கள், இல்லை, இங்கே ஆண்கள் இன்னும் இருக்கிறார்கள், பெண்ணை சக மனுஷியாய் பார்க்கும் ஆண்கள் நிறைய இருக்கிறார்கள், அப்படி ஒருவனோடு வாழ்கிறேன், அப்படி ஒருவனை ஈன்றிருக்கிறேன், எனக்கான மழைத்துளிகளை எவரும் எனக்கு சொல்வதில்லை, எனக்கு தேவை இல்லாத குடைகளை எவரும் எனக்கு பிடிப்பதில்லை, விதிமீறல்களை மீறிக்கொண்டு என் ஆடை நனைத்த ஒவ்வொரு துளியையும் எண்ணிப் பார்த்து கொண்டே நடந்தேன்....
Thoughts - The fastest, the most beautiful and the most volatile. This blog is an attempt to capture some of them before they pass away.
சனி, 27 ஜூன், 2020
நான் பெண்
கைப்பை,திறன்பேசி எல்லாம் பாலித்தீன் கவரில் போட்டுவிட்டு, மழையில் நனைந்து கொண்டே நடந்தேன், எவ்வளவு சுகம், மழையில் நனையாதே என்று அம்மா சொன்னதை மீறி நனைந்ததே முதல் விதிமீறல், எனக்கென்னவோ மழையில் நனையாதே என்று சொல்வது தான் விதிமீறலாய் தெரிந்தது. பரிட்சைக்கு படி என்றார்கள், பிடித்ததை படித்தேன்..இழுத்து மூடு என்றார்கள், கண்ணை மூடிக்கொள் என்றேன்..ஒருவனே கற்பென்றார்கள், பரிணாம வளர்ச்சி படி என்றேன்..புல்லானாலும் புருஷன் என்றார்கள், புல்லை வெளியே வை என்றேன்.. வாழாவெட்டி ஆவாய் என்றார்கள், வாழ்வை வெட்டியாய் ஆக்க விருப்பமில்லை என்றேன்.. துணையில்லாமல் வாழ முடியாது என்றார்கள், துணை தான் தேவை தலைவன் இல்லை என்றேன்.. திமிர் பிடித்தவள் தனியாக தான் இருக்க போகிறாய் என்றார்கள், இல்லை, இங்கே ஆண்கள் இன்னும் இருக்கிறார்கள், பெண்ணை சக மனுஷியாய் பார்க்கும் ஆண்கள் நிறைய இருக்கிறார்கள், அப்படி ஒருவனோடு வாழ்கிறேன், அப்படி ஒருவனை ஈன்றிருக்கிறேன், எனக்கான மழைத்துளிகளை எவரும் எனக்கு சொல்வதில்லை, எனக்கு தேவை இல்லாத குடைகளை எவரும் எனக்கு பிடிப்பதில்லை, விதிமீறல்களை மீறிக்கொண்டு என் ஆடை நனைத்த ஒவ்வொரு துளியையும் எண்ணிப் பார்த்து கொண்டே நடந்தேன்....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
காலமானி கனவுகள்..
பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...
-
தமி ழ்.. உலகோடு என்னை இணைத்துக்கொள்ள உதவிய முதல் பாலம். என்னை சேர்ந்த மனிதர்கள் தவிர நான் ஆழமாய் நேசிப்பதாய் உணர்ந்த முதல் உறவு.. ஆங்கிலம் வ...
-
Clasping the hands together, resting the forehead on them, closing the eyes so tightly making it difficult for every single photon to hit t...
-
மனித வெடி குண்டு ,,, இரக்கமற்ற அரக்கர்கள் எரிகிறது மனம் பதைபதைக்கிறேன் நான் கண் சிமிட்டி சிரிக்கிறது கையில் உள்ள சிகரெட் துண்டு ......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக