கைப்பை,திறன்பேசி எல்லாம் பாலித்தீன் கவரில் போட்டுவிட்டு, மழையில் நனைந்து கொண்டே நடந்தேன், எவ்வளவு சுகம், மழையில் நனையாதே என்று அம்மா சொன்னதை மீறி நனைந்ததே முதல் விதிமீறல், எனக்கென்னவோ மழையில் நனையாதே என்று சொல்வது தான் விதிமீறலாய் தெரிந்தது. பரிட்சைக்கு படி என்றார்கள், பிடித்ததை படித்தேன்..இழுத்து மூடு என்றார்கள், கண்ணை மூடிக்கொள் என்றேன்..ஒருவனே கற்பென்றார்கள், பரிணாம வளர்ச்சி படி என்றேன்..புல்லானாலும் புருஷன் என்றார்கள், புல்லை வெளியே வை என்றேன்.. வாழாவெட்டி ஆவாய் என்றார்கள், வாழ்வை வெட்டியாய் ஆக்க விருப்பமில்லை என்றேன்.. துணையில்லாமல் வாழ முடியாது என்றார்கள், துணை தான் தேவை தலைவன் இல்லை என்றேன்.. திமிர் பிடித்தவள் தனியாக தான் இருக்க போகிறாய் என்றார்கள், இல்லை, இங்கே ஆண்கள் இன்னும் இருக்கிறார்கள், பெண்ணை சக மனுஷியாய் பார்க்கும் ஆண்கள் நிறைய இருக்கிறார்கள், அப்படி ஒருவனோடு வாழ்கிறேன், அப்படி ஒருவனை ஈன்றிருக்கிறேன், எனக்கான மழைத்துளிகளை எவரும் எனக்கு சொல்வதில்லை, எனக்கு தேவை இல்லாத குடைகளை எவரும் எனக்கு பிடிப்பதில்லை, விதிமீறல்களை மீறிக்கொண்டு என் ஆடை நனைத்த ஒவ்வொரு துளியையும் எண்ணிப் பார்த்து கொண்டே நடந்தேன்....
Thoughts - The fastest, the most beautiful and the most volatile. This blog is an attempt to capture some of them before they pass away.
சனி, 27 ஜூன், 2020
நான் பெண்
கைப்பை,திறன்பேசி எல்லாம் பாலித்தீன் கவரில் போட்டுவிட்டு, மழையில் நனைந்து கொண்டே நடந்தேன், எவ்வளவு சுகம், மழையில் நனையாதே என்று அம்மா சொன்னதை மீறி நனைந்ததே முதல் விதிமீறல், எனக்கென்னவோ மழையில் நனையாதே என்று சொல்வது தான் விதிமீறலாய் தெரிந்தது. பரிட்சைக்கு படி என்றார்கள், பிடித்ததை படித்தேன்..இழுத்து மூடு என்றார்கள், கண்ணை மூடிக்கொள் என்றேன்..ஒருவனே கற்பென்றார்கள், பரிணாம வளர்ச்சி படி என்றேன்..புல்லானாலும் புருஷன் என்றார்கள், புல்லை வெளியே வை என்றேன்.. வாழாவெட்டி ஆவாய் என்றார்கள், வாழ்வை வெட்டியாய் ஆக்க விருப்பமில்லை என்றேன்.. துணையில்லாமல் வாழ முடியாது என்றார்கள், துணை தான் தேவை தலைவன் இல்லை என்றேன்.. திமிர் பிடித்தவள் தனியாக தான் இருக்க போகிறாய் என்றார்கள், இல்லை, இங்கே ஆண்கள் இன்னும் இருக்கிறார்கள், பெண்ணை சக மனுஷியாய் பார்க்கும் ஆண்கள் நிறைய இருக்கிறார்கள், அப்படி ஒருவனோடு வாழ்கிறேன், அப்படி ஒருவனை ஈன்றிருக்கிறேன், எனக்கான மழைத்துளிகளை எவரும் எனக்கு சொல்வதில்லை, எனக்கு தேவை இல்லாத குடைகளை எவரும் எனக்கு பிடிப்பதில்லை, விதிமீறல்களை மீறிக்கொண்டு என் ஆடை நனைத்த ஒவ்வொரு துளியையும் எண்ணிப் பார்த்து கொண்டே நடந்தேன்....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
காலமானி கனவுகள்..
பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...
-
தேசபக்தர் 1 - 'என்னங்க 20 ஜவான்கள கொன்றுக்கானுங்க, உள்ள விட்டு எல்லாரையும் காலி பண்ண வேணாம், இந்தியா என்ன சலச்சதா', தேசபக்த...
-
'ஆறு மாசு உழைப்பு வீணா போல, நீ வாடி Luvlygirl செல்லம்', மணதுக்குள் விசிலடித்துக் கொண்டே ரகசிய கேமராக்களை படுக்கை அறையில் வழக்கம்...
-
கடந்த இரண்டு மாதங்களாக இதுவே வழக்கமாக மாறி இருந்தது,ரோட்டோரமாய் வளர்ந்திருந்த இந்த சின்ன மரத்தின் கீழ்தான் அவனை முதல் முதல் சந்தித்தது...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக