சனி, 27 ஜூன், 2020

வலி

'அப்பா இத விட்ருங்கப்பா',
ஸ்கெட்ச் போட்டாச்சு, அந்த ப்ரேமா பொண்ணு அவ ஸ்கூட்டில வர, மருது ஃபைக்க குறுக்க விட்டுட்டான்,
'இது பாவம் பா, நெறைய பேர் சாபம்',
கீழ விழுந்து ஹெல்மட்டோடே அவள இழுத்துக்கிட்டு வந்த வண்டிய பாத்து நானும் தாஸீம் ஓடுரோம், ' பொழைக்க ஆயிரம் வழி இருக்குப்பா', பக்கத்துல வந்ததும் சட்ட பின்னாடி வச்சிருந்த கத்திய உருவி நான் அவ கழுத்துக்கும் தாஸ் அவ நெஞ்சுக்கும் குறி வச்சோம், பணம் குடத்தவன் மிஸ்ஸே ஆக கூடாதுன்னு நெறைய காசு குடுத்துருக்கான், 'நீ நேத்து போட்டவருக்கு என்ன மாதிரி பொண்ணு இருக்குப்பா', தாஸின் கத்தி அவள் நெஞ்சிலிருந்து ஒரு அடி தூரமும் என்னுடையது ஒன்றரை அடியும் இருக்கும் நேரத்தில், 'நான்  செத்தாலாச்சும் இந்த பாவத்த விடுவியாப்பா',  கழுத்துக்கு  இன்னும் அரை அடி தூரம் என் கத்தி இருக்கும் போது கழுத்தில் இருந்த அது மின்னியது, குழம்பினேன், தாஸின் கத்தி இன்னும் ஒரு ஜான் தூரத்தில் இருந்த போது சட்டென மூளைக்கு பட்டது நான் பார்த்து பார்த்து என் ஆசை மகளுக்கு வாங்கிய தங்கசெயின் அது.., கழுத்துக்கு ஒரு ஜான் தூரத்தில் கை திசை மாற, வேணான்டா என்று நான் கத்த தொடங்குவதை உணராத தாஸின் கத்தி அவள் மார்பை ஊடுருவ, எனது கத்தி அவள் கழுத்தை தடவிக்கொண்டே நகர, நான் ஊட்டி ஊட்டி வளர்த்த சிறு சிறு உதிரத்துளிகள் என் முகம் நோக்கி வர, என் கால்களை இறுக்கி பிடித்த அந்த கைகள், பிஞ்சிலிருந்து என் கால்களை பிடித்து வளர்ந்த அந்த அழகான கைகள், 'ஆத்தாஆஆஆஆ'  தாஸின் கத்தி என் உயிரில் வலியை இறக்கி க் கொண்டிருக்க நான் செய்த பாவங்கள் எல்லாம் எடுத்துக்கொண்டு என் உயிர் பிரிந்து கொண்டிருந்தது....

கருத்துகள் இல்லை:

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...