சனி, 27 ஜூன், 2020

மழையோடு நான்

ஒவ்வொரு மழைத்துளி மேலே விழும் போதும், ஐ ஃபீல் லிபரேட்டட், சிறு வயதில் இருந்து நான் கடந்து வந்த ஒவ்வொரு மழையிலும் ஒரு துளியாவது நனையாமல் இருந்ததில்லை, ஒரு முறை வந்த மழை வெள்ளத்தில் கூட 'துளியில் ஜனித்தது துளியில் கரையட்டுமே' என்று பரவச நிலையிலேயே மனம்  இருந்தது, நம்ப மாட்டீர்கள், என் ஜூன் மாத பிறந்தநாள் ஒன்றில் கூட மழை என்னை ஆசிர்வதிக்காமல் இருந்ததில்லை, இந்த   பிறந்தநாள் மட்டும் இரவாகியும் இன்னும்  மழை  வரவில்லை. நெஞ்சோரம் சிறியதாக உருவான வலி மேகம் போல் மெல்ல உடலெங்கும்  பரவிக்கொண்டிருக்க, தலைக்கு மேல் இடி சத்தம், ஆனந்தமாக  வான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, இமை மூட, விழும் எல்லா துளிகளோடும் இரண்டர கலந்து கொண்டிருந்தேன்,,, ஐ ஃபீல் லிபரேட்டட்...

கருத்துகள் இல்லை:

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...