சனி, 27 ஜூன், 2020

கதவை திற காதல் வரட்டும்



கடந்த இரண்டு மாதங்களாக இதுவே வழக்கமாக மாறி இருந்தது,ரோட்டோரமாய் வளர்ந்திருந்த  இந்த சின்ன மரத்தின் கீழ்தான் அவனை முதல் முதல் சந்தித்தது, இங்குதான் காதல் சொன்னது, கூட்டம் மறைந்த அந்த அரை நிமிடத்தில் ஒரு முத்தம் கொடுத்தானே, அதுவும் இங்குதான், அன்றெல்லாம் இமை மூடாமல் மயங்கிக் கிடந்தேன், ஒரு நாள் ஊர் மாறிப்போகும் முன் இதே மரத்தடியில் என் மனமுடைந்து விட்டு போனான், அன்று கோபத்தில் ஒரு இலை பிடுங்கி கசக்கி எறிந்தேன், அன்று முதல் இதை கடக்கும் போதெல்லாம், எவனோ செய்த தவறுக்கு வெரும் சாட்சியாய் நின்ற இந்த மரத்தின் இலை பறித்து அதை தண்டித்துக் கொண்டிருந்தேன், ஆனால் பறிக்க பறிக்க எப்படி இலைகள் துளிர்க்கின்றன தெரியவில்லை.. 'எக்ஸ்க்யூஸ் மி', திரும்பினேன், சூப்பர் மேன் மாதிரி இல்லாமல் சுமாராக நின்றிருந்த அவனைப் ஏறிறங்கப் பார்த்தேன், ' சாரிங்க, நன் ஆஃப் மை பிசினஸ், ஆனா நெறைய டைம் உங்கள இந்த மரம் கீழ பாத்திருக்கேன், எல பறிக்கும் போது அதுக்கு வலிக்குமா தெரியல, ஆனா காரணமே இல்லாம  அதோட எலைய பறிக்கிறது சரி இல்லன்னு தோனுது', பதட்டமில்லாமல் கண்ணில் கருணை கொஞ்ச பேசியவன் இப்போது சுமாரிலிருந்து சூப்பராகவே தெரிந்தான், உதிர்ந்த பின்னும் இலைகள் அழகாக எப்படியோ துளிர்க்கின்றன.....

கருத்துகள் இல்லை:

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...