சனி, 27 ஜூன், 2020

தாய்

எல்லார் கண்களிலும் என் மீது வெறுப்பு தெரிந்தது, 3 வாரமாய் வெளியில் வராத நான் இன்று என் மகனுக்கு பிடித்தது போல் சமைக்கவே கடைக்கு வந்தேன்,  ஒரே பிள்ளை, செல்லமாக வளர்ந்தவன், இந்த மூன்று வாரம்  ஜெயிலில் என்ன கொடுத்தார்களோ தெரியாது, மிகவும் பலவீனமாக இருந்தான் , நேற்றுதான் பெயிலில் அழைத்து வந்தேன், இன்று நன்றாய் சாப்பிட்டு கொஞ்சம் உடல் தேரட்டும், அவன் உடனே மயங்கவோ மறிக்கவோ கூடாது,  உயிருறுப்பில் ரத்தம் கசியும் வலியை அவன் சில மணி நேரமாவது முழு உணர்வோடு அனுபவிக்காவிட்டால் அந்த இரு பெண் பிள்ளைகள் அனுபவித்த கொடுமைக்கு நியாயம் எப்படி கிடைக்கும். காய் கறியோடு கத்தியும் கயிரும் வாங்கிக் கொண்டேன்....

கருத்துகள் இல்லை:

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...