சனி, 27 ஜூன், 2020

கொலையும் செய்வாள்



செக் லிஸ்ட்டை ஒரு முறை மனதுக்குள் சரிபார்த்துக் கொண்டேன், 1. காதலன் அனுப்பியது போன்று அவள் இன்பாக்ஸில்    மெயில்கள் - செக், 2. அதை அவள் படித்து பதில் அனுப்பியது போல்  நானே அவள் மெயிலில் இருந்து அனுப்பிய பதில் மெயில்கள் - செக், 3. ஓடிப்போனது போல செட் செய்ய பேஃக் செய்த நகை, ட்ரஸ் - செக் 4. அவசர தேவை என்று அவளையே  பாங்கில் இருந்து எடுத்து வர சொன்ன ரெண்டு லட்சம் - செக், 5. நகை, பணம் பதுக்கி வைக்க தனிப் பை - செக், அவள் உடம்பை மறைக்க ஒதுக்குபுறமான இடம் - செக், இன்று நான் மதுரைக்கு போக எடுத்து வைத்த லேட் நைட் பஸ் டிக்கெட் - செக் , முக்கியமான ஐடம், என் கல்லூரி லேப்பில் இருந்து யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்த சையனைட் - செக், எல்லாம் ரெடி , இனி மர்டர், பாடி டிஸ்போஸல், மதுரை ட்ராவல், பணம் நகை அங்கே மறைத்தல், 2 நாளாக மனைவி காணவில்லை என்ற கண்ணீர், போலிஸ் கம்ப்ளெயின்ட், மெயில் ஆதாரம் அவளை ஓடுகாலியாக காட்டுவது எல்லாம் பெர்பக்ட் என்று யோசிக்கும் போதே உள்ளே வந்தவள் , 'ஏங்க, பேங்க்ல என்  ஃப்ரண்ட் சசி ஃபோன் பண்ணா, இன்னைக்கு ஏதோ அங்க பெரிய ப்ரச்சனையாம், பணத்த திரும்ப எண்ணிப் பாத்துக்க சொன்னா' என்று அனத்த, பாவம்  கடைசி ஆசையை செய்து தொலைக்கலாம் என்று பணத்தை  எண்ணி வைக்கும் போது கண்கள் மங்கின, அவள் பேசத் தொடங்கினாள், ' எல்லாம் ஓ.கே தான,  நக்கி நக்கி எண்ணியே,அதுல ஒரே நோட்ல ஒரே ட்ராப் தாம்பா வெச்சேன் ஒன் சையனைட', எனக்கு மாரில் வலி இறங்கியது, 'நீ செத்ததும் போலிஸ் வரும், லேப்ல இருந்து சையனைட் திருட்னத கண்டுபிடிக்கும், அப்புறம் நான் அடிக்கடி செக் பண்ணாத என் மெயில புத்திசாலித்தனமா யூஸ் பண்ணியே, அதுல அட்லீஸ்ட் ரெண்டு தடவ நீ ரெஸ்பான்ட் பண்ண டைம்ல நான் பக்கத்துல சீசீடீவி இருக்குற சூப்பர் மார்க்கெட் ல இருந்தேன், நான் அத அணுப்பலன்னு ப்ரூவ் பண்ணிடலாம்,  அதுக்கப்புறம் இதெல்லாம் உன் வேலைன்னு கண்டுபுடிக்கிறது  அவ்ளோ கஷ்டம் இல்ல, என்ன கொஞ்சம் விசாரிப்பாங்க ,  சமாளிச்சிடுவேன், எப்டியுப்  உன் வேணி கூட நீ ஜாலியா ஊட்டில எடுத்தயே செல்ஃபி, அத சைலன்டா ரிலீஸ் பண்ணுவேன், அது போதும்,  நீ என்ன கொல்ல ப்ளான் பண்ணி, அதுக்குள்ள ஆக்ஸிடென்டலா ஒரு ட்ராப் எப்படியோ  கன்ச்யூம் பண்ணி செத்துட்டன்னு கேஸ முடிக்க',  அவள் சொல்வது புத்தி வரை போக தடுமாறின, தலையில் ஐந்து டண் பாரம், மூச்சு திணறியது, 'செக் மேட் மச்சி', உடலெல்லாம் வலி பரவ கண்கள் மூடிக் தொடங்கின....

கருத்துகள் இல்லை:

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...