'பாரு, இருவது வருஷம் முன்னாடி எடுத்த ஃபோட்டோ, அதே எடம், அதே மரம், அதே ஆளுங்க, பகல்ல மாடு மாதிரி வேல செய்ய வேண்டியது, சாய்ந்தரம் ஊர் கத பேச வேண்டியது, ராத்திரி சாப்ட்டு தூங்க வேண்டியது, அனிமல் லைஃப், ஏதாவது புதுசா செய்வோம், கொஞ்சம் ஸ்மார்ட்டா பணம் பண்ணுவோம்னு கெடையாது, அதான் இந்த பட்டிக்காட்லயே இருக்கானுங்க, நாம ஒலகம் பூரா சுத்திட்டு இருக்கோம்', அப்பா காமித்த ஃபோட்டோவில் இன்றைக்கு பார்த்த அத்தனை பேரும் கிட்டத்தட்ட அப்படியே இருந்தனர், கண்களில் கண்ணாடி இல்லாமல், அதன் கீழ் கருவளையம் இல்லாமல், முடி எல்லாம் அடர்த்தியாக, முகத்தில் இளமையோடு, சுருக்கம் இல்லாத நெற்றியோடு அப்பா மட்டுமே வேறு மாதிரி இருந்தார்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக