சனி, 27 ஜூன், 2020

யாருப்பா அது கடவுளா




முட்டாள், நல்ல சான்ஸ விட்டுட்டியே, திரும்ப கிடைக்குமா? கடவுள சுத்தி வரவனுக்கு பிரசாதம் தான் கெடைக்கும், நேத்து திடு திப்புனு அந்த கடவுளே கண்ணு முன்னாடி வந்து நின்னானே, வந்து என்ன காசா கேட்டான், கொஞ்சம் ரெஸ்ட் வேணும், யாரும் கொஞ்ச நாளுக்கு பிரார்த்தன பண்ண வேணாம்னு மக்கள் கிட்ட தூதனா போய் சொல்லு னு சொன்னான், நான் முட்டாள் மாதிரி லீவ், லாஸ் ஆஃப் பே எல்லாம் யோசிச்சு முடிக்கிற முன்னாடி காணா போய்ட்டான். தூதனா போறேன், இத குடு அத குடு னு கேட்டு தொலைக்க தோணாம போச்சு, நைட் எல்லாம் உக்காந்து லிஸ்ட் போட்டு வச்சிருக்கேன், இனி எப்போ கடவுள் வந்தாலும் ஒழுங்கா டீல முடிக்கணும் னு நெனச்சுட்டு கடவுள சுத்தி வந்தேன், என்ன ஆச்சர்யம் கடவுள் ஹாயா உக்காந்துட்டு இருந்தாரு, கை கட்டி பவ்யமா கடவுளே நான் தூதனா போறேன் னு சொன்னேன், அவர் கல கல னு சிரிச்சாரு, தெய்வீக சிரிப்பு, சிரிச்சுப்புட்டு என் தலைல ஒரு இடிய போட்டு உடைச்சாரு, உடைச்சாரு என்ன உடைச்சாரு, உடைச்சான்..நான் லிஸ்ட் தான் போட்டேன், எவனோ மூளக்காரன் கடவுள் வேலைக்கே அப்ளிகேஷன் போட்டு கடவுளுக்கு ரெஸ்ட் குடுத்துட்டான். இந்தாளு இப்ப கடவுளே இல்ல, இவன சுத்தி என்ன பிரயோஜனம், போயான்னு வெளில வந்துட்டேன், இனி அந்த புது கடவுள எங்க போய் தேடுவேன்!

கருத்துகள் இல்லை:

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...