சனி, 27 ஜூன், 2020

ஏனோ நான்



எனக்கு இரண்டு விசயம் ரொம்ப பிடிக்கும், வானம் - கடல், இட் கிவ்ஸ் மீ எக்ஸ்டசி, ஒரு கவித சொல்லட்டுமா, 'கரை கொண்ட வானம்-கடல், முடிவில்லா கடல்-வானம்', நல்லா இருக்குல்ல, இந்த கடல் தண்ணில கால் படும் போது யோசிச்சு பாருங்களேன், நீங்க பூமி ஃபுல்லா பரவி இருக்க ஒரு தொடரிய தொட்ரீங்க, யூ நோ, யூ ஆர் டச்சிங் எ கண்டினுயம் , கரைல இருக்கும் போது அப்டியே ஒரு சுனாமி வந்து கூப்டு போனா எவ்லோ லிபரேட்டிங்கா இருக்கும், 'நீரில் கருவானேன், நீருக்குள் எருவாவேன்', நானும் அப்பப்ப போய் பாக்குறேன், ஒன்னும் வர மாட்டேங்குது, கடல்க்கு எம்மேல என்ன கோபமோ தெரில,  சரி விடுங்க, இந்த வானம் எவ்ளோ அழகு, தலைக்கு மேல ப்ரபஞ்சம் நெறஞ்சு வழியுது, நாமதான் பாக்குறதே இல்ல, வானம் ஃபுல்லா  நட்சத்திரம்  இரஞ்சு கெடக்குறத பாத்துருக்கீங்களா, இட்ஸ் எ ப்லிஸ், வானத்த பாத்துட்டே இருந்தாலே நாம ஒரு தூசி மாதிரி எவ்ளோ மினிஸ்க்யூல் னு புரியும், இந்த அகம்பாவம் எல்லாம் அழிஞ்சிடும், அதுனாலதானோ என்னவோ, என் அப்பா அம்மா அதெல்லாம் பாக்குறதே இல்ல, எவ்ளோ காசு இருந்தாலும் பத்தாம ஓடிட்டே இருக்காங்க, அவுங்கள விடுங்க, நீங்க பாத்துருக்கீங்களா?  ஊருக்குல்ல  நட்சத்திரம் நெறஞ்ச வானத்த எல்லாம் பாத்துருக்க மாட்டீங்க, ஐரனி இல்ல, அவ்ளோ கோடி நட்சத்திரத்த  நூறு ஸ்ட்ரீட்லைட்டும் காத்துல இருக்க கண்ணுக்கு தெரியாத குட்டி குட்டி தூசியும் சேந்து மறச்சிடுது, அதான் அடிக்கடி அடம்  புடிச்சு கடல் ஒட்டி இருக்க இந்த காட்டுக்கு வந்துடுவேன், இங்க  மனுஷங்க நெறைய இல்ல ,  அண்ட் நைட்ல சுத்தீல  லைட் இல்ல, நைட் ஃபுல்லா ஒக்காந்து ஒக்காந்து வானத்த பாத்துட்டே இருக்கலாம், ஆனா இன்னைக்கு நைட்ட இந்த மேகம் எல்லாம் சேந்து மறச்சு வச்சிருக்கு,  மேகத்த பாத்தா காமடியா இருக்கும், நெறைய பேருக்கு மேகம் ஒரு சைன் ஆஃப் ஃப்ரீடம், வானம் எல்லாம் அதுக்கு சொந்தம் மாதிரி தெரியும், அது ஏதோ சுதந்திரமா சுத்துர மாதிரி தெரியும், ஆனா ஆக்ட்சுவலா காத்து ஒதச்சு தல்ற எடத்துக்கு எல்லாம் போர பால் தான் மேகம், அதுக்கு தன்னிச்சைனு ஒன்னு கெடயாது, இட்ஸ் எ விக்டிம் ஆஃப் ஸம்ஒன் எல்ஸ் சாய்ஸ், கிட்டதட்ட என்ன மாதிரி, மே பீ உங்கள மாதிரி, ஒருபக்கம் எல்லையே இல்லாத வானம், இன்னொரு பக்கம் அலைக்கழிக்கிற  காத்து, வானத்த ஏக்கமா பாத்துட்டே காத்தோட நோக்கத்துக்கு நடந்து போய்ட்டே இருக்கும் பாவம் அந்த மேகம், என்ன மாதிரி, உங்கள மாதிரி......

கருத்துகள் இல்லை:

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...