சனி, 27 ஜூன், 2020

வன்முறை

அவள் கண்களில் இன்று நான் பார்த்தேன், ஓரிரு முறை பள்ளியிலும் அக்கம் பக்கத்திலேயும் சொன்ன போது சிறு பிள்ளை தானே என்று எதார்த்தமாக விட்டு விட்ட நான் இன்று நேரிலேயே பார்த்த போதே உணர்ந்தேன், வெளியில்  வெறும் வன்மமும் வெறியுமாய் தெரியும் அவளது அந்த  கோபத்திற்கு கீழே ஆறாத ரணமும் வலியும் நிறைய இருக்க வேண்டும். தந்தை இல்லாதவளாய் வளரக்கூடாது என்று அவளுக்காகவே உடலாலும் மனதாலும் அவர் கொடுத்த காயங்களை இத்தனை நாள் பொறுத்து கொண்டிருந்தது தவறென்று தோன்றுகிறது, ஒன்று இன்றோடு இது நிற்க வேண்டும் இல்லையேல் அம்மாவின் முழு அன்போடு மட்டும் அவள் வளரட்டும், இன்று அவரிடம் இது பற்றி பேச, இல்லை,  வாதிட எனக்கு பயமில்லை...

கருத்துகள் இல்லை:

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...