சனி, 27 ஜூன், 2020

வலைதள கண்ணீர்

'இத்தனை நாள் எழுதிக் கொண்டிருந்த என் பேனாவிற்கும், என் சிந்தனைகளுக்கும் நிரந்தர ஓய்வு கொடுக்கிறேன், கல்லறை காற்று என் நுரையீரல் நிரைக்கட்டும்', இத்தனை நாள் நான் எழுதியதை சமூக வலைதளங்களில் எவரும் சீண்டாத  விரக்தியில் எனக்குள் இருந்த எழுத்தாளனின் மரண வாக்குமூலமாய் இதை பதிவு செய்து விட்டு அடுத்த நாள் பார்த்தால், அத்தனை ஷேர்கள், சிந்தனையாளனை நிராகரிக்கும் உலகம் என்று மொத்த உலகமும் இரங்கலையும் கோபத்தையும் பதிவு செய்திருந்தது, இதற்கு முந்தைய என் பதிவுகள் எல்லாம் இன்னும் அனாதையாகவே நின்றுகொண்டிருந்தன...

கருத்துகள் இல்லை:

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...