ராஜ்தூத் ராஜு என்றுதான் ஊரே கூப்பிடும், ராஜு அண்ணன் மாநிறம், வலுவான உடல் கட்டு, நேர்த்தியான மீசை, கஞ்சி போட்ட வேஷ்டி சட்டை, அந்த ராஜ்தூத் மேல் அவர் வரும் போது நாட்டாமை சரத்குமார் போல கம்பீரமாக இருக்கும். பல பெண்கள் ரகசியமாக ரசித்த பேரழகன், ஊரில் பெரிய பணக்காரர்களில் ஒருவர், வீட்டில் கார் இருந்தாலும் ராஜ்தூத் தவிர வேறு எதிலும் அவரை பார்த்ததில்லை.. இறந்து போன பிள்ளை, பிரிந்து போன மனைவி, பெரும்பாலும் வையின்ஷாப் வாசலிலேயே கிடந்த ராஜ்தூத், விற்கப்பட்ட சொத்துகள், 12 வருடத்தில் 50 வயது போல் ஆகிப்போனார் ராஜு அண்ணன். ஒரு காலத்தில் பெரும் உதவிகள் செய்தவர், ஆனாலும் சும்மா காசு வாங்கக்கூடாது என்று நான் கொடுத்த காசுக்கு பதிலாக ராஜ்தூத் சாவியை என் கையில் திணித்து விட்டு நகர்ந்தவர், திரும்ப வந்து ' எங்கயும் கோடு போட்றாத டா தம்பி' என்று சொல்லிவிட்டு அந்த ராஜ்தூத்தின் ஹேன்டில்பார் மீது கைகளை நகர்த்திக்கொண்டே இருந்த அந்த முப்பது விநாடிகள் எத்தனை சம்பாஷனைகள் அவர்கள் இருவருக்குள்ளும் நடந்தன என்று யாருக்கும் தெரியாது.. 'நல்ல வண்டி, இல்ல' என்று சொல்லி விட்டு ஈரம் வற்றிய கண்களுடன் நகர்ந்து சென்றார் ராஜு அண்ணன், ஒரு பக்கம் தலை சாய்த்து சலனமின்றி நின்றிருந்தது ராஜ்தூத்...
Thoughts - The fastest, the most beautiful and the most volatile. This blog is an attempt to capture some of them before they pass away.
சனி, 27 ஜூன், 2020
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
காலமானி கனவுகள்..
பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...
-
தமி ழ்.. உலகோடு என்னை இணைத்துக்கொள்ள உதவிய முதல் பாலம். என்னை சேர்ந்த மனிதர்கள் தவிர நான் ஆழமாய் நேசிப்பதாய் உணர்ந்த முதல் உறவு.. ஆங்கிலம் வ...
-
'ஆறு மாசு உழைப்பு வீணா போல, நீ வாடி Luvlygirl செல்லம்', மணதுக்குள் விசிலடித்துக் கொண்டே ரகசிய கேமராக்களை படுக்கை அறையில் வழக்கம்...
-
தங்க மீன்கள் திரைக்காவியத்தில் வரும் 'ஆனந்த யாழ்' மெட்டில் மனம் சுற்றிக் கொண்டே இருந்தது. நானும் பெண்ணை பெற்ற அப்பனானதால் அந்த மெட...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக