சனி, 27 ஜூன், 2020

மொத தடவ


எதுவும் மொத தடவ தான்ங்க கஷ்டம், இந்த 'விழுமியம்'ன்றாங்களே, எது சரி எது தப்புனு சொல்றது, ஒவ்வொரு 'மொத தடவ' யும் நமக்குள்ள அத மாத்தி எழுதிடும். திருட்றது தப்புன்னு தான் நெனச்சிட்டிருந்தேன், மொத தடவ திருட்ற வரைக்கும், செயின அறுக்கும் போது அந்த பெரியம்மா கழுத்துல இரத்தம் வந்துச்சே, 'தேவப்பட்டா ரத்தம் பாக்கலாம்'னு மொத தடவ அப்பதான் தோனுச்சு, அப்புறம் பொம்பள வாசம், வெட்டுகுத்து,எல்லாம் பழகிடுச்சு. இந்த ஒடம்பெல்லாம் இழுத்துகிட்டு, கண்ணு வெளில வரும்போது அப்டியே அந்த உசுரு அந்த கண்ணு வழியா போகும் பாருங்க, மொத தடவ நடுங்கும், தூக்கம் வராது, அப்புறம் பழகிடும், அதும் தப்பில்லன்னு ஆய்டும். வெட்டு வாங்கிட்டு மொத தடவ நாய் மாதிரி ரோட்ல கெடந்தேனே, யாருனே தெரில, ரெண்டு மூனு பேரு, ஆம்புலன்ஸ் ல ஏத்துர வரைக்கும் கூடவே நின்னதுங்க,அவுங்க கண்ல தண்ணி, மொத தடவ மனசுன்னு ஏதோ முழுச்சுச்சு, டாக்டரா நர்ஸா வார்ட்பாயா தெரியல, உசுரு போறது பாத்து பழகியிருக்கேன், ஆனா ஒத்த உசுர கட்டிப்போட எத்தன பேரு, எத்தன ஓட்டம், 'தங்கச்சியா நெனச்சுக்கண்ணே' ன்னு கழுவி விட்டாளே, அவ தங்கச்சி இல்ல, தாயி, ஒரு மாசம் மேல இன்னைக்கு தான் எழுந்து ஒக்காந்தேன், 'சிக்கன் சாப்ட்டு ஒடம்ப தேத்து மச்சி', முன்னால இருந்த அந்த கறித் துண்ட பாக்கும் போது மொத தடவ உள்ள வலிச்சது, 'இட்லி சாப்டுக்குறேன் மாப்ள' என்றேன், உள்ள எங்கயோ என்னோட அந்த விழுமியம் மாறிக்கிட்டிருந்தது....


கருத்துகள் இல்லை:

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...