சனி, 27 ஜூன், 2020

அன்பிற்கும் உண்டோ


இவன வளத்தது பத்தாது னு இந்த நாய கொண்டு வந்து விட்டுட்டு ஹாஸ்டல் போய்ட்டான், இத வாசல் தாண்டி உள்ள எல்லாம் விட மாட்டேன், சனியன் ஏதாச்சும் பண்ணினா யாரு வீட்ட சுத்தம் பண்ணிட்டே இருக்கது, வேளா வேளைக்கு சோறு போட்டு தொலைக்கிறேன் என்று வாசலிலேயே கட்டிப் போட்டு விட்டேன்.ஒரு வாரம் ஆகிடுச்சு, சோத்த தின்னுட்டு அது பாட்டுக்கு கெடந்துச்சு, இன்னைக்கு கொஞ்சம் மேலுக்கு முடியல, அதோட எதையோ சமச்சு அதுக்கு வச்சுட்டு அப்டியே அசந்து வாசல்ல உக்காந்துட்டேன், எப்பவும் வெடுக்கு வெடுக்குனு முழுங்குற நாயி இன்னைக்கு திங்காம என்னையே பாத்துட்டு இருந்துச்சு, மெல்ல பக்கத்துல வந்து என் மடில அப்டியும் இப்டியும் மூஞ்சிய முட்டிகிட்டு, ஏதோ என் வேதன புரிஞ்சா மாதிரி என் பக்கத்துல உக்காந்து என்னவே  உத்து பாத்துச்சு,  கருணை னு சொல்லுவாங்களே, அந்த மாதிரி,எனக்கு உள்ளுக்குள்ள என்னென்னவோ பண்ணுச்சு, அப்பா அம்மா ஞாபகம்  எல்லாம் வந்துடுச்சு, மெல்ல அதோட கயித்த அவுத்து விட்டேன், நான் எழுந்து உள்ள போக என் முந்தானைய புடிச்சிட்டடே ஒரு சின்ன உசுரு வீட்டுக்குள்ள வந்துச்சு...

கருத்துகள் இல்லை:

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...