சனி, 27 ஜூன், 2020

காதலிக்க நேரமில்லை

கேம்ப் முடியும் நாளுக்காக காத்திருந்து மிகவும் உற்சாகமாக வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தேன், எனக்கு விபரம் தெரிந்த நாள் முதலாய் ஆண் பிள்ளைகள் மட்டுமே நிறைந்திருந்த எதிர் வீட்டில், நான் கேம்ப் கிளம்பும் ஒரு நாள் முன்புதான், இரண்டு பட்டாம்பூச்சிகளோடு புதிதாக ஒரு குடும்பம் வந்திறங்கியது... ராம், பாலாஜி என்று நாராசமாய் பெயர்கள் வந்த எதிர் வீட்டு ஜன்னல் வழியே கோகிலா, மல்லிகா என்று சங்கீதம் போல் பெயர்கள் கேட்டன. நான் பார்க்க அவள் பார்க்க,   கண்ணோடு வந்த கண்ணா என்று அவள் கொஞ்ச, கண்ணாடி கண்ணா என்று நான் கவி எழுத, டும் டும் டும், பிள்ளைகள் என்று பல அடுக்குகளில் அந்த இரு அவள்களோடும்  கணவுகள் குடியேற, கேம்ப் முடித்து வீட்டிற்குள் நுழைந்தால், எல்லா பொருட்களும் பேக் செய்யப்பட்ட நிலையில் எனக்கு ஆயிரம் வாட்ஸ் அதிர்ச்சி தர, அந்த பக்கம் அம்மா  கலங்கிய கண்ணில் கோபமாய், 'இத்தன வயசுல ஒங்களுக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு', என்று கோபமாய் எதையோ போட்டுடைக்க, 'அந்த ராஜேஷீக்கு தான்டி பைத்தியம், உம்மேல, இல்லாட்டி அவன் பொண்ணுக்கு எதுக்குடி உம்பேரு வச்சான், நான் அவன் வீட்டுக்கு எதிர்ல இருக்க மாட்டேன்' அவர் பங்கிற்கு அவரும் கத்திவிட்டு என் நெஞ்சில் கத்தி விட்டுப் போக.. இப்போது மெல்ல புரிந்தது,  மை மம்மி வாணி என்ற கோகிலவாணி தான் எதிர் வீட்டு கோகிலாவின் பெயர் காரணம்! வொய் மம்மி வொய்!!!

கருத்துகள் இல்லை:

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...