சனி, 27 ஜூன், 2020

ஆட்டோகிராப்


6 வயதில் நான் - பெருசாகி சேகர் சார் தான் கல்யாணம் பண்ணிப்பேன்,
14 வயதில் நான் - என்னவோ தெரிலடி, அந்த சந்த்ரு பக்கத்துல இருந்தா உள்ளுக்குள்ள வயலின் வாசிக்கிற மாதிரியே ஒரு ஃபீல், 20 வயதில் நான் - அவினாஷ் கூட எனக்கிருக்குறது வெறும் பிரன்ட்ஷிப் மாதிரி தெரியல,  25 வயதில் நான் - இல்லடி, க்ரிஷ்ணா என் வாழ்க்கை க்கு செட் ஆக மாட்டான், 29 வயதில் நான் - முடிவு பண்ணிட்டேன், இவன்தான், 59  வயதில் நான்-   குமார் போனப்புறம் கொழந்தைகளே வாழ்க்கைனு இருந்த எனக்கு  இந்த ராம் சார் கூட இருந்தா ரொம்ப ஆறுதலா இருக்கு...


(பி.கு : இத்தன பேரான்னு  என்  கியாரக்டர ஜட்ஜ் பன்றவுங்களுக்கு மட்டும், இதே நான் ஆம்பளையா இருந்தா ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ன்னு ஆட்டோக்ராஃப் சேரன் மாதிரி ஃபீல் பண்ணி இருப்பீங்கள்ள, என்னோடதும் எல்லாம் ரொம்ப அழகான காதல்தான் பாஸ், ஆம்பளைங்களுக்கு மட்டும்தான் காதல் அணுக்கள் வேல செஞ்சா ஒலகத்துல வெறும் ஓரிண சேர்க்கை தான் இருந்திருக்கும்,சுபம்..)

கருத்துகள் இல்லை:

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...