புதன், 22 ஜனவரி, 2014

சிறு துளிகள்

வாழ்க்கை

காலண்டர் வாழ்க்கை,
புதிதாய் பிறக்கும் நாட்கள்,
சுழலும் பழைய தேதிகள்...

மதுரை சாலைகள் 

சந்திப்புகள் காவல் காக்கும் தலைவர் சிலைகள்..
சிக்னல் பொருத்தாமல் சிலையாய் காவல் துறை...

கண்மை

போன மழையில்,
உன் கண்மை திருடிச் சென்ற மேகம்..
இன்று வானில் கருப்பாய்..

ஈதல் யாசகம்

புண்ணியம் வேண்டி அன்னதானம்!
ஈதல் யாசகம்...

பகல்

பகல் கொள்ளை!!
எங்கே போனது??
இரவெல்லாம் நான் காவல் காத்த,
என் மின்மினி பூக்கள்...

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...