வெள்ளி, 7 ஜூன், 2013

மழை


மழை 

காற்றின் காமம்,
எரியும் மேகம்,
வியர்வைத் துளியாய் கொட்டிடும் வானம்.

அண்டவெளியில் 
ஓர் அற்புத அரங்கம்,
வெள்ளி கற்களை வெட்டிடும் சுரங்கம்.

விண் கூடும் ,
பின் மண் சேரும் ,
கற்பு தாண்டிய காதல் ஞானம் .

பூமிப் பந்தின் சுத்தம்,
இது வாழும் உயிர்களின் ரத்தம்,
கோடிக் கணக்கில் முட்டினாலும், காதில் இனிக்கின்ற சத்தம்.

காற்று கட்டிய வின் கழிகள்,
நிறைந்து வழிந்திடும் தேன் துளிகள்,
அனாதை மரங்களை குளிப்பாட்ட, வீதி வந்த தேவதைகள்.

வர்ணம் பார்க்காத இலவச தாய்ப் பால்,
தலைகள் கொய்யாத அழகிய கூர்வாள்
ஆவதும் உண்டு அழிவதும் உண்டு, உண்மையில் மழையே நீயொரு பெண்பால்.

Bol Na Halke Halke - My Own Tamil Lyrics


My own Tamil Lyrics for the tune of ‘Bol Na Halke Halke’ song from Jhoom Bharabar Jhoom


காதலன்  :

மேகம் போல பார்வை வீசி போகும் பாவையே,

தாகம் கொண்ட வேர் நான், உந்தன் தீண்டல் தேவையே..

 
காதலி :

உனை சேர நானே, மழை ஆகினேனே, உன் 

மடி சேர்ந்த பின்னே உயிர் பூக்கிறேனே .
 

காதலன்  :

கண்ணில் கண்டேன் கண்டேன், காதல் கண்டேன் கண்டேன் 

உந்தன் ஜீவன் கண்டேன், என் தேடல் கண்டேன்.  

                                                                     (மேகம் )

-------------------------------------------------------------------------------

காதலன்  :

இரவோடு நான்விழி மூடினால்,

கனவோடு நீ, உறவாடினாய்...

 

காதலி :

கனவோடு நீ, உயிர் கூடி பின்,

ஏறி மீன்கள் போல், மறைந்தோடினாய்...

 

காதலன்  :

தொலை தூரம் போனால், வாழ்வேனோ நானே,

உன் நிழல் மஞ்சம் வேண்டும், இடம் கொஞ்சம் தாயேன்.

 

இருவரும் :

கண்ணில் கண்டேன் கண்டேன், காதல் கண்டேன் கண்டேன் 

உந்தன் ஜீவன் கண்டேன், என் தேடல் கண்டேன்.  

                                                                     (மேகம் )

 -----------------------------------------------------

 

காதலன்  :

ஒரு சூரியன், போதும் கண்ணே,

இமை மூடிடு, வெயில் தாளுமே ...

 

காதலி :

ஒரு சந்திரன், போதும் கண்ணா,

அணைக்காமல் நில், குளிர் போகுமே,

 

காதலன்  :

உனை தீண்டும் காற்றில் , உயிர் வாழ்கிறேன் நான்,

நீ அணைக்காத போது, அனைகின்றேன் நானே.

இருவரும் :

கண்ணில் கண்டேன் கண்டேன், காதல் கண்டேன் கண்டேன் 

உந்தன் ஜீவன் கண்டேன், என் தேடல் கண்டேன்.  

                                                                     (மேகம் )

---------------------------------------------------- 

 

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...