'இன்று எப்படியும் கண்டஹா காடு வரை ஓடி விட வேண்டும்' . என்னால் கண்டிப்பாக ஓட முடியும்.' ஒவ்வொரு நாளும் இப்படித்தான் தொடங்குகிறேன். தினமும் முண்ணேற்றம் தெரிகிறது. ஆனால் இன்னும் நான் ஓட நினைத்த தூரம் ஓடவில்லை. நிச்சயம் ரே யால் அவ்வளவு தூரம் ஓட முடியாது. நான் அவனை விட அதிக அதிக தூரம் ஓடிக் காட்டினால் அவள், என் மனதைக் கொள்ளைக் கொண்ட அவள் எனக்குக் கிடைக்கும் வாய்ப்பு அதிகமாகும். எந்த வாய்ப்பையும் தவற விடுபவன் நானில்லை. 'பியா, கிளம்பு ஓடலாம்.' பியா எனது செல்லப்பிராணி மட்டும் அல்ல, என்னுடைய குழந்தை மாதிரி, என்னுடைய நல்ல தோழி கூட. நான் தினமும் அதிக நேரம் மனம் விட்டுப் பேசுவது அவளோடு தான். இருவரும் ஓட தயாரானோம். பியா என்னை விட வேகமாகவும் தூரமாகவும் ஓட முடிந்தால் கூட, என்றும் என்னைத் தாண்டி ஓடியது இல்லை. ஓடத் தொடங்கினோம். எண்ணங்கள் எங்கெங்கோ பறக்க தொடங்கியது. அவளை சேர்வது எப்படி என்ற எண்ணம் பல யோசனைகளை தந்தது. அனால் முதல் படி, கண்டஹா தான். அந்த காடு வரை ஓடுவது தான் அவளோடு எனக்கான தூரத்தை குறைக்க போகும் முதல் அடி. அதற்கடுத்ததை அப்புறம் பார்க்கலாம்.
இப்போது நான் கண்டஹா வரை ஓடுவது யாருக்கும் தெரியாது. நண்பர்களுக்கு தெரிந்தால் கிண்டல் செய்வார்கள். வீட்டில் தெரிந்தால் அவ்வளவுதான். அவர்கள் ஏன் என்று கேட்பது எனக்கு பிரச்சனை இல்லை. அனால் கண்டஹா பற்றிய அவர்களின் பயத்தை என்னால் வெல்ல முடியாது. அங்கு ஏதோ அதீத சக்தி கொண்ட மிருகங்கள் இருப்பதாக நிறைய பேர் நம்புகிறார்கள். அவைகள் ஆபத்து நிறைந்தன எனவும், அங்கு யாரும் செல்ல கூடாது எனவும் ஊரில் பலரும் நம்புகிறார்கள். ஒரு சிலர் அங்கு வேற்று கிரஹ மனிதர்கள் வந்து போவதாக கூட சொல்கிறார்கள். ஏன், எனது தந்தை கூட அந்த பக்கம் விசித்திர பறக்கும் எந்திரங்களை பார்த்திருப்பதாக கதை சொல்லி இருக்கிறார். அது எதையும் நான் நம்பியது இல்லை. மற்றவரை பயமுடுத்துவதில் சிலருக்கு ஒரு சந்தோஷம். நாளடைவில் அந்த சந்தோஷம் குறைந்து போனாலும், பயம் மட்டும் சமூகத்தில் ஒட்டிக் கொள்கிறது. அதை பற்றியெல்லாம் கவலை பட இது நேரம் இல்லை. அவள் எனக்கு கிடைக்க வேண்டும், அது மட்டும் தான் இப்போது என்னுடைய இலக்கு. அதோ, அங்கு தெரியும் அந்த பெரிய மரம் தான் என்னுடைய இப்போதைய குறிக்கோள். இன்று என் எல்லையை தொட்டு விடுவேன் போலிருக்கிறது. அவள் என் அருகில் வந்து விட்டது போல் ஒரு உணர்ச்சி. எண்ணங்கள் என் மூச்சிரைப்பை விட வேகமாய் ஓடின. இதோ, தொட்டு விட்டேன் எனது முதல் வெற்றியை. உடல் முழுதும் வலி, அதை விட அதிகமாய் மகிழ்ச்சி. என் எண்ணம் ஈடேற போகிறது. குதித்தேன், கத்தினேன். எல்லா பக்கமும் பார்த்து பலமாய் சிரித்தேன்.
பியாவும் என்னோடு இங்கும் அங்கும் குதித்துக் கொண்டிருந்தாள் . அவளை அள்ளி அணைக்க ஆவல் கொண்டு அருகில் சென்றேன். என்ன ஆனதோ தெரியவில்லை, பியா திடீரென்று எனக்கெதிராக திரும்பி அந்த புதருக்கு அப்பால் ஓடத் தொடங்கினாள் . என்ன ஆனது இவளுக்கு!! புரியாமல் அவளைப் பிடிக்க நானும் பின்னால் ஓடினேன். உடல் ஒத்துழைக்கவில்லை. ஆனால் பியா இல்லாமல் நான் எப்படி திரும்ப போவது? முடியாதென்றாலும் அவளை தொடர முயற்சி செய்தேன். வேகமாய் ஓட நினைத்த போது காலில் ஏதோ இடறியது. கீழே விழுந்து உருளத் தொடங்கினேன். தலையை ஏதோ கனமான ஒன்று உரசிச் சென்றது, உடலின் எல்லா பக்கமும் ஊசி துளைப்பது போல் உணர முடிந்தது. பியாவின் குரல் மெல்லமாய் கேட்டது . ஆனால் எதுவும் உண்மை போல் இல்லை. கண்கள் சொருகியது, எல்லாம் மறைவது போல் ஒரு மயக்கம். உடல் இப்போது அசையவில்லை, நான் உருள்வது நின்றிருக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக வலி குறைந்தது, ஒவ்வொரு உணர்ச்சியாக மறைந்து கொண்டே போனது. கண்கள் முழுதுமாய் மூடினேன். அமைதியாய் இருந்தது. அவளுடைய முகம் ஒரு முறை நினைவில் வந்து போனது. அழகாய் இருக்கிறாள். அமைதி, மயான அமைதி...
பாகம் இரண்டு
இப்போது நான் கண்டஹா வரை ஓடுவது யாருக்கும் தெரியாது. நண்பர்களுக்கு தெரிந்தால் கிண்டல் செய்வார்கள். வீட்டில் தெரிந்தால் அவ்வளவுதான். அவர்கள் ஏன் என்று கேட்பது எனக்கு பிரச்சனை இல்லை. அனால் கண்டஹா பற்றிய அவர்களின் பயத்தை என்னால் வெல்ல முடியாது. அங்கு ஏதோ அதீத சக்தி கொண்ட மிருகங்கள் இருப்பதாக நிறைய பேர் நம்புகிறார்கள். அவைகள் ஆபத்து நிறைந்தன எனவும், அங்கு யாரும் செல்ல கூடாது எனவும் ஊரில் பலரும் நம்புகிறார்கள். ஒரு சிலர் அங்கு வேற்று கிரஹ மனிதர்கள் வந்து போவதாக கூட சொல்கிறார்கள். ஏன், எனது தந்தை கூட அந்த பக்கம் விசித்திர பறக்கும் எந்திரங்களை பார்த்திருப்பதாக கதை சொல்லி இருக்கிறார். அது எதையும் நான் நம்பியது இல்லை. மற்றவரை பயமுடுத்துவதில் சிலருக்கு ஒரு சந்தோஷம். நாளடைவில் அந்த சந்தோஷம் குறைந்து போனாலும், பயம் மட்டும் சமூகத்தில் ஒட்டிக் கொள்கிறது. அதை பற்றியெல்லாம் கவலை பட இது நேரம் இல்லை. அவள் எனக்கு கிடைக்க வேண்டும், அது மட்டும் தான் இப்போது என்னுடைய இலக்கு. அதோ, அங்கு தெரியும் அந்த பெரிய மரம் தான் என்னுடைய இப்போதைய குறிக்கோள். இன்று என் எல்லையை தொட்டு விடுவேன் போலிருக்கிறது. அவள் என் அருகில் வந்து விட்டது போல் ஒரு உணர்ச்சி. எண்ணங்கள் என் மூச்சிரைப்பை விட வேகமாய் ஓடின. இதோ, தொட்டு விட்டேன் எனது முதல் வெற்றியை. உடல் முழுதும் வலி, அதை விட அதிகமாய் மகிழ்ச்சி. என் எண்ணம் ஈடேற போகிறது. குதித்தேன், கத்தினேன். எல்லா பக்கமும் பார்த்து பலமாய் சிரித்தேன்.
பியாவும் என்னோடு இங்கும் அங்கும் குதித்துக் கொண்டிருந்தாள் . அவளை அள்ளி அணைக்க ஆவல் கொண்டு அருகில் சென்றேன். என்ன ஆனதோ தெரியவில்லை, பியா திடீரென்று எனக்கெதிராக திரும்பி அந்த புதருக்கு அப்பால் ஓடத் தொடங்கினாள் . என்ன ஆனது இவளுக்கு!! புரியாமல் அவளைப் பிடிக்க நானும் பின்னால் ஓடினேன். உடல் ஒத்துழைக்கவில்லை. ஆனால் பியா இல்லாமல் நான் எப்படி திரும்ப போவது? முடியாதென்றாலும் அவளை தொடர முயற்சி செய்தேன். வேகமாய் ஓட நினைத்த போது காலில் ஏதோ இடறியது. கீழே விழுந்து உருளத் தொடங்கினேன். தலையை ஏதோ கனமான ஒன்று உரசிச் சென்றது, உடலின் எல்லா பக்கமும் ஊசி துளைப்பது போல் உணர முடிந்தது. பியாவின் குரல் மெல்லமாய் கேட்டது . ஆனால் எதுவும் உண்மை போல் இல்லை. கண்கள் சொருகியது, எல்லாம் மறைவது போல் ஒரு மயக்கம். உடல் இப்போது அசையவில்லை, நான் உருள்வது நின்றிருக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக வலி குறைந்தது, ஒவ்வொரு உணர்ச்சியாக மறைந்து கொண்டே போனது. கண்கள் முழுதுமாய் மூடினேன். அமைதியாய் இருந்தது. அவளுடைய முகம் ஒரு முறை நினைவில் வந்து போனது. அழகாய் இருக்கிறாள். அமைதி, மயான அமைதி...
பாகம் இரண்டு