புதன், 7 ஆகஸ்ட், 2013

வல்லமை தாராயோ


நத்தையாய் நான்  பிறந்திருக்கலாம்,
கூட்டில் நாணும் தத்தையாய் கூட பிறந்திருக்கலாம்,
அறிவொன்று அதிகம் கொண்டும் சொத்தையாய் போய் பிறந்தேனே !

பணமும் படையும் கைகள் கோற்றிட ,
தினமும் இங்கே தர்மம் தோற்றிட,
வேசி போல் நானும் வெட்கத்தை விற்றேனே !

தேர்தல் வரும் பொது தெய்வமாகவும் ,
தேவை வரும் பொது தெருப் பினமாகவும்,
உயிர் தொலைத்து நானும் எத்தனை நாள் வாழ்வேனோ!

தந்தை தன் விந்தோடு வீரத்தை சேர்த்திருக்கலாம்,
தாய் தன் பாலோடு தன்மானம் ஊட்டி இருக்கலாம்.
இரண்டும் இல்லா வெறுமை நான், கருவோடேன்னை கலைத்திருக்கலாம்.

அ ஃறினை போல் வளர்கின்றேன்,
அம்மணமாய் நான் உணர்கின்றேன்,
அண்டம் தாங்கும் ஆண்டவனே, ஆண்மை வரங்கொடு துதிக்கின்றேன்.. 

கருத்துகள் இல்லை:

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...