நத்தையாய் நான் பிறந்திருக்கலாம்,
கூட்டில் நாணும் தத்தையாய் கூட பிறந்திருக்கலாம்,
அறிவொன்று அதிகம் கொண்டும் சொத்தையாய் போய் பிறந்தேனே !
பணமும் படையும் கைகள் கோற்றிட ,
தினமும் இங்கே தர்மம் தோற்றிட,
வேசி போல் நானும் வெட்கத்தை விற்றேனே !
தேர்தல் வரும் பொது தெய்வமாகவும் ,
தேவை வரும் பொது தெருப் பினமாகவும்,
உயிர் தொலைத்து நானும் எத்தனை நாள் வாழ்வேனோ!
தந்தை தன் விந்தோடு வீரத்தை சேர்த்திருக்கலாம்,
தாய் தன் பாலோடு தன்மானம் ஊட்டி இருக்கலாம்.
இரண்டும் இல்லா வெறுமை நான், கருவோடேன்னை கலைத்திருக்கலாம்.
அ ஃறினை போல் வளர்கின்றேன்,
அம்மணமாய் நான் உணர்கின்றேன்,
அண்டம் தாங்கும் ஆண்டவனே, ஆண்மை வரங்கொடு துதிக்கின்றேன்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக