திங்கள், 9 செப்டம்பர், 2013

கூர் பார்வையாள்

நாவின்றி,
பாவின்றி,
மொழியின்றி
ஒலியின்றி,
பாடல் கேட்டேன்
உன் பார்வையிலே

நீ,
வெட்டிப் போட்ட நகத்தின் பிறைகள்,
கட்டி எறிந்த சாக்லேட் உறைகள்,
எட்டிக் கிழித்த இலையின் குறைகள்,
இத்தனை பொறுக்கியவர் பலரின் நடுவில்,
உன் பார்வை மட்டும் சேகரிப்பவன் நான்.

நிகரென்று நின்றாலே,
புவி ஈர்ப்பும் தோற்று போகுமே
தவிப்போடு நிலவும் தேயுமே,
கவி தேடி மொழியும் ஏங்குமே,
அவிக்கின்ற கதிரும் காயுமே,

மறுப்போடு தவிர்த்தாலும்,
வெறுப்போடு எரித்தாலும்,
உயிர் தைக்கும் வித்தையாலே,
என் உளம் தொட்ட பார்வையாளே !!!

கருத்துகள் இல்லை:

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...