தங்க மீன்கள் திரைக்காவியத்தில் வரும் 'ஆனந்த யாழ்' மெட்டில் மனம் சுற்றிக் கொண்டே இருந்தது. நானும் பெண்ணை பெற்ற அப்பனானதால் அந்த மெட்டிற்கு ஒரு பாட்டெழுத தோன்றியது. முயற்சி செய்திருக்கிறேன்.
வானவில் தேரில் ஏற்றுகிறாய்,
எந்தன் வானத்தில் பேரொளி ஊற்றுகிறாய்.
காற்றினில் ஈரம் கூட்டுகிறாய்,
எந்தன் கால்களில் சிறகை பூட்டுகிறாய்.
ஒரு பாலை மணலில் பூக்களை நிரப்பி,
சோலைகள் பரப்பிய சாரலும் நீ.
எந்தன் ஆயுள் முழுக்க கண்ணுக்குள் சுமப்பேன்,
அன்னையுமாக்கினாய் என்னையே நீ.
இந்த பூமியில் எதுவும் தேவை இல்லை,
நம் கூட்டுக்குள்ளே வரும் சொர்க்கமடி.
நம் வாழ்க்கைக்கு வேண்டிய செல்வம் எல்லாம்,
தினம் புன்னகையாலே தந்திடு நீ.
கண்களில் தெரியும் தென்றலடி,
என் கைகளில் கிடைத்த திங்களடி ,
வண்ணத்து பூச்சியின் வண்ணமடி,
வெண்பனி உந்தன் கன்னமடி.
தினம் பார்வைக்குள் புதைத்து, பாதங்கள் பதித்து,
மோட்சங்கள் கொடுக்கும் தெய்வமடி.
உன் தாமரை விழியின் தாள் திறக்க பல சூரியன்கள் தினம் பூக்குமடி.
(வானவில் தேரில்...)
மேகத்தின் மேலொரு வீடு கட்டி,
ஆடிடலாம் நாம் கண்ணை பொத்தி,
புள்ளினம் போலே இறக்கை கட்டி ,
போய் வரலாம் நாம் விண்ணை முட்டி.
எந்தன் பூமகள் தேகம் நோவெடுத்தால் நான்,
ஊஞ்சலாய் சுமப்பேன் கையை கட்டி.
உந்தன் பொன்விழி தூக்கம் கண்டுவிட்டால்,
நான் மெத்தை செய்வேன் என் தோள்கள் தட்டி.
(வானவில் தேரில்...)
வானவில் தேரில் ஏற்றுகிறாய்,
எந்தன் வானத்தில் பேரொளி ஊற்றுகிறாய்.
காற்றினில் ஈரம் கூட்டுகிறாய்,
எந்தன் கால்களில் சிறகை பூட்டுகிறாய்.
ஒரு பாலை மணலில் பூக்களை நிரப்பி,
சோலைகள் பரப்பிய சாரலும் நீ.
எந்தன் ஆயுள் முழுக்க கண்ணுக்குள் சுமப்பேன்,
அன்னையுமாக்கினாய் என்னையே நீ.
இந்த பூமியில் எதுவும் தேவை இல்லை,
நம் கூட்டுக்குள்ளே வரும் சொர்க்கமடி.
நம் வாழ்க்கைக்கு வேண்டிய செல்வம் எல்லாம்,
தினம் புன்னகையாலே தந்திடு நீ.
கண்களில் தெரியும் தென்றலடி,
என் கைகளில் கிடைத்த திங்களடி ,
வண்ணத்து பூச்சியின் வண்ணமடி,
வெண்பனி உந்தன் கன்னமடி.
தினம் பார்வைக்குள் புதைத்து, பாதங்கள் பதித்து,
மோட்சங்கள் கொடுக்கும் தெய்வமடி.
உன் தாமரை விழியின் தாள் திறக்க பல சூரியன்கள் தினம் பூக்குமடி.
(வானவில் தேரில்...)
மேகத்தின் மேலொரு வீடு கட்டி,
ஆடிடலாம் நாம் கண்ணை பொத்தி,
புள்ளினம் போலே இறக்கை கட்டி ,
போய் வரலாம் நாம் விண்ணை முட்டி.
எந்தன் பூமகள் தேகம் நோவெடுத்தால் நான்,
ஊஞ்சலாய் சுமப்பேன் கையை கட்டி.
உந்தன் பொன்விழி தூக்கம் கண்டுவிட்டால்,
நான் மெத்தை செய்வேன் என் தோள்கள் தட்டி.
(வானவில் தேரில்...)
2 கருத்துகள்:
Parthi anna, lovely song..i think your daughter has you wrapped around her little finger!
Nice bro
கருத்துரையிடுக