சனி, 19 ஜனவரி, 2013

வேசி

மொழியை விற்பவன் கவிஞன்
அறிவை விற்பவன் அறிஞன்,
ஊரை விற்பவன் தலைவன்,
என்னை விற்பதால் நான் வேசி!!!

மேய்ப்பவன் எல்லாம்  கடவுளாய் நிற்கும் உலகில்,
மேயப்படும் நான் ஆடாய் நிற்கிறேன்,

பயிர் போலத்தான் நானும்,
விளைந்ததும்  விலைக்கு வந்து விட்டேன்...

தின்றவன் வயிறு நிறைந்த பின்னே,
பாத்திரம் மட்டும் எச்சில் ஆனது எப்படி?
மொய்ப்பவனெல்லம் இங்கு ஈ இல்லையாம்,
தேன் கிண்ணம் நான் மட்டும் தப்பானது எப்படி?

உம் காம நெருப்பில் நான் நெய்யாக எரிகின்றேன் ,
கனல் தீர்ந்த பின் ஏன் கரியாக கிடக்கின்றேன்!!

பசி வந்தால் பத்தும் பறந்து போகும்,
சொன்னவன் ஞானி, வாழ்பவள் வேசி!!

எத்தனை பேர் கூடினாலும்,
நான் வாக்கப்பட்டது என்னவோ வறுமைக்குத் தான்..

இருளோடு நான் தேவதையா!!
உலகோடு ஒரு தே______ ?! :(

கருத்துகள் இல்லை:

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...