வெள்ளி, 7 ஜூன், 2013

மழை


மழை 

காற்றின் காமம்,
எரியும் மேகம்,
வியர்வைத் துளியாய் கொட்டிடும் வானம்.

அண்டவெளியில் 
ஓர் அற்புத அரங்கம்,
வெள்ளி கற்களை வெட்டிடும் சுரங்கம்.

விண் கூடும் ,
பின் மண் சேரும் ,
கற்பு தாண்டிய காதல் ஞானம் .

பூமிப் பந்தின் சுத்தம்,
இது வாழும் உயிர்களின் ரத்தம்,
கோடிக் கணக்கில் முட்டினாலும், காதில் இனிக்கின்ற சத்தம்.

காற்று கட்டிய வின் கழிகள்,
நிறைந்து வழிந்திடும் தேன் துளிகள்,
அனாதை மரங்களை குளிப்பாட்ட, வீதி வந்த தேவதைகள்.

வர்ணம் பார்க்காத இலவச தாய்ப் பால்,
தலைகள் கொய்யாத அழகிய கூர்வாள்
ஆவதும் உண்டு அழிவதும் உண்டு, உண்மையில் மழையே நீயொரு பெண்பால்.

Bol Na Halke Halke - My Own Tamil Lyrics


My own Tamil Lyrics for the tune of ‘Bol Na Halke Halke’ song from Jhoom Bharabar Jhoom


காதலன்  :

மேகம் போல பார்வை வீசி போகும் பாவையே,

தாகம் கொண்ட வேர் நான், உந்தன் தீண்டல் தேவையே..

 
காதலி :

உனை சேர நானே, மழை ஆகினேனே, உன் 

மடி சேர்ந்த பின்னே உயிர் பூக்கிறேனே .
 

காதலன்  :

கண்ணில் கண்டேன் கண்டேன், காதல் கண்டேன் கண்டேன் 

உந்தன் ஜீவன் கண்டேன், என் தேடல் கண்டேன்.  

                                                                     (மேகம் )

-------------------------------------------------------------------------------

காதலன்  :

இரவோடு நான்விழி மூடினால்,

கனவோடு நீ, உறவாடினாய்...

 

காதலி :

கனவோடு நீ, உயிர் கூடி பின்,

ஏறி மீன்கள் போல், மறைந்தோடினாய்...

 

காதலன்  :

தொலை தூரம் போனால், வாழ்வேனோ நானே,

உன் நிழல் மஞ்சம் வேண்டும், இடம் கொஞ்சம் தாயேன்.

 

இருவரும் :

கண்ணில் கண்டேன் கண்டேன், காதல் கண்டேன் கண்டேன் 

உந்தன் ஜீவன் கண்டேன், என் தேடல் கண்டேன்.  

                                                                     (மேகம் )

 -----------------------------------------------------

 

காதலன்  :

ஒரு சூரியன், போதும் கண்ணே,

இமை மூடிடு, வெயில் தாளுமே ...

 

காதலி :

ஒரு சந்திரன், போதும் கண்ணா,

அணைக்காமல் நில், குளிர் போகுமே,

 

காதலன்  :

உனை தீண்டும் காற்றில் , உயிர் வாழ்கிறேன் நான்,

நீ அணைக்காத போது, அனைகின்றேன் நானே.

இருவரும் :

கண்ணில் கண்டேன் கண்டேன், காதல் கண்டேன் கண்டேன் 

உந்தன் ஜீவன் கண்டேன், என் தேடல் கண்டேன்.  

                                                                     (மேகம் )

---------------------------------------------------- 

 

செவ்வாய், 29 ஜனவரி, 2013

விஷ்வரூபம்

நம்ம நாட்ட நெனச்சா சிரிப்பு தான் வருது, உண்மைய சொல்லனும்னா பயமாவும் இருக்கு. ஒரு பழமொழி சொல்லுவாங்களே, 'ஈர பேனாக்கி , பேன பெருமாளாக்குற' கதைன்னு,,,அய்யயோ, ஹிந்துத்வா சகோதரர்களே, பெருமாளோட பேன சேத்து வச்சு பேசுறேன்னு பூகம்பத்த கிளப்பிடாதேங்க. நான் பொதுவா சொன்னேன். தூண்லயும் துரும்புலயும் இருக்குற உங்க பெருமாள் பேன்லயும் இருப்பாருன்னு ப்ரீயா விடுங்க சாமி. இப்பெல்லாம் கடவுளோட பேர சொல்லி அரசியல் பன்றது பிரபலமாச்சே. உங்களுக்கெல்லாம் என்னய்யா வேணும், இன்னமும் ஊர் பக்கமெல்லாம் அம்ம போட்டா,  முஸ்லிமா இருந்தாலும் மாரியம்மன் கோவில்ல வேப்பெல தீர்த்தம் வாங்கிட்டு போவாங்க, காய்ச்சல் கீய்ச்சல் வந்தா ஹிந்து குழந்தையா இருந்தாலும் தர்கா போயி மந்திரிச்சுட்டு வருவாங்க. இதெல்லாம் உங்களுக்கு பிடிக்கல, அதான!! இந்த சினிமா படத்த இப்படி கூட பாக்கலாம்னு தெரியாத சராசரி மக்களோட மனசுல கூட விஷத்த வெதச்சுட்டீங்க. படிச்ச மக்க மாரு கூட ஹிந்து முஸ்லிம்னு பிரிச்சு பேசுற அளவுக்கு ஒரு பிரச்சன பண்ணிடீங்க. சந்தோசமா சாமிகளே !!

நான் பிறந்தது ரஹீம் தெரு அப்டின்னுஇஸ்லாமிய நண்பர்கள் அதிகமா வாழ்ற ஒரு குட்டி தெரு. என்னோட மொத  மூணு நாலு வயசு வரைக்கும் முழுக்க முழுக்க இஸ்லாமிய சொந்த பந்தங்களுக்கு நடுவுல தான்  வளந்து இருக்கேன் . மைதீன் மாமா, தாதி, சையது, நிலாபர் எல்லாரும் இப்ப கூட நெனப்புல இருக்காங்க. நான் கூட ரெண்டு வயசுல கொஞ்சம் உருது பேசுவேன்னும், முட்டி போட்டு எங்க வீட்டுக்குள்ள தொழுக பன்னுவேன்னும் எங்கம்மா சொல்லுவாங்க. எங்க அப்பா சபரி மல போகும் போது தெருல இருக்குற எல்லாரும் வந்து சரணம் பாடுவாங்களாம். இன்னும் கூட பழைய ப்ளாக் அண்ட வைட் போட்டோ எல்லாம் வீட்ல இருக்கு. இப்பவும் ஊர்ல இருந்து மெக்கா போற தெரிஞ்சவுங்களுக்கு அப்பா காணிக்கை குடுத்துட்டு வருவாரு. என்ன பொறுத்த வர, இஸ்லாமியரோட அடையாளமா நான் நெனைக்கிறது என்னோட சின்ன வயசுல பாத்த அந்த அன்பான மனுசங்க தான். ஆனா திடீர்னு பாத்தா எங்கேயோ ஆப்கான் ல இருக்குற தாலிபன் தான் இஸ்லாமிய அடையாளம் அப்டின்ற மாதிரி ஒரு சில அரசியல் சார்ந்த அமைப்புகள் எல்லாம் பேசுறது மனச காய படுத்துது. எத்தனையோ இஸ்லாமிய பெரியவுங்க, 'இந்த தாலிபனும் அதே போல பல நாடுகள்லயும் இருக்குற மதவாதிகள் யாருக்கும் இஸ்லாம் அப்டினாலே என்னான்னு தெரியாது, அல்லாஹ் பேர சொல்றதால அவுங்க எல்லாம் முஸ்லிமாக முடியாது ' அப்டின்னு சொல்லி இருக்காங்க. ஆனா கூச்சமே இல்லாத அரசியல் வாதிங்க சம்மந்தமில்லாமா எங்கேயோ இருக்குற இனவாதிங்கள தங்களோட அடையாளமா பேசுறது கேட்டா எரிச்சலும் கோபமும் தான் வருது. இதெல்லாம் பேசுறவங்களுக்கு  ஆப்கான் ல பிழைக்க பயந்து வேற நாட்டுக்கு போன சராசரி முஸ்லிம் மக்கள் யாரு பத்தியாவது தெரியுமா!! லண்டனில் டாக்ஸி ஓட்டும் ஒரு ஆப்கான் சகோதரர் , வல்லரசுங்களோட சதியால எதுக்கு இதெல்லாம் பண்றோம்னு தெரியாமவே பண்ணிட்டு இருக்குற தாலிபன் பத்தி புலம்பி கேட்டு இருக்கேன். சராசரி மனுசங்களுக்கு எதிரான வன்முறைய கண்டுக்காதவுங்க எல்லாம் ஒரு சினிமாவ கண்டிக்கிறாங்க.

எந்த வரலாறும் தெரியாம, எதாவது பேசி மக்கள குழப்பி அரசியல் பண்றது ஒன்னும் புதுசு இல்ல. ஆனா உலகம் எங்க போயிட்டு இருக்குனு கொஞ்சம் பாருங்க கணவான்களே. ஒரு ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி ஐரோப்பா வுல, மத்திய ஆசியால புனித போர்னு எவ்வளவோ கொடுமைங்க நடந்து இருக்கு. இந்தியா ல சைவம் வைணவம் அப்டின்ற பேருல எத்தனயோ பேர் செத்து இருப்பாங்க. ரொம்ப நூறு வருஷத்துல சின்ன அரசுங்க, பெரிய ராஜ்யங்களோட  சண்டைல மக்க்கள கொன்னு குவிச்சு இருக்காங்க. ஒரு 300 வருஷத்துக்கு முன்னாடி இம்பீரியலிசம் ன்ற பேர்ல ஒரு சில பேரரசுங்களோட ஆட்டத்துல எத்தனையோ நாடுங்க சிக்கி செதறி இருக்கு. இப்போ ஒரு 70,80 வருஷத்துக்கு முன்னாடி வல்லரசு நாடுங்க கொஞ்ச பேரால 2 உலக போர் வந்து போய் இருக்கு. ஆனா இன்னைக்கு நிற பேதம் பாக்குறது அநாகரிகம்னு  பெரும்பாலும் ஏத்துக்கிட்ட சமுதாயத்துல இருக்கோம். உலகம் ஒன்னும் அமைதி பூங்கா வா மாறல. ஆனா ஒரு சில நாடு தவிர மற்ற இடத்தில எல்லாம் தினசரி வாழ்க்கைல போர் பயம் இல்ல. இன்னும் ஒரு சில நூறு வருஷத்துல, இன்னைக்கு இருக்குற பொருளாதார குற்றம் எல்லாம் கூட மறஞ்சு போயி மனுஷங்க சந்தோசமா இருப்பாங்கனு ஒரு சின்ன நம்பிக்கை இருக்கு. இதுக்கு நடுல உங்க அரசியலால நாட்ல மத பிரிவினைய கொண்டு வராதீங்க. மக்களே, நாம கூட கொஞ்சம்உஷாரா தான் இருக்கணும். சாதி மதத்த பத்தி பேசுற இயக்கங்கள் கிட்டவும் அரசியல் வாதிங்க கிட்டவும் பீ கேர் புல்.

முடிக்கிறதுக்கு முன்னாடி, நம்ம விஸ்வரூப பிரச்சனைக் காக நான் யோசிச்ச ஒரு சின்ன மொக்கை. " வீரப்பன் காளி பக்தன்னு சொன்னா, உடனே காளி பக்தன் எல்லாரும் வீரப்பன்னு நீ அவமான படுத்துற" அப்டின்னு சொன்னா என்னங்க நியாயம் ????



சனி, 19 ஜனவரி, 2013

வேசி

மொழியை விற்பவன் கவிஞன்
அறிவை விற்பவன் அறிஞன்,
ஊரை விற்பவன் தலைவன்,
என்னை விற்பதால் நான் வேசி!!!

மேய்ப்பவன் எல்லாம்  கடவுளாய் நிற்கும் உலகில்,
மேயப்படும் நான் ஆடாய் நிற்கிறேன்,

பயிர் போலத்தான் நானும்,
விளைந்ததும்  விலைக்கு வந்து விட்டேன்...

தின்றவன் வயிறு நிறைந்த பின்னே,
பாத்திரம் மட்டும் எச்சில் ஆனது எப்படி?
மொய்ப்பவனெல்லம் இங்கு ஈ இல்லையாம்,
தேன் கிண்ணம் நான் மட்டும் தப்பானது எப்படி?

உம் காம நெருப்பில் நான் நெய்யாக எரிகின்றேன் ,
கனல் தீர்ந்த பின் ஏன் கரியாக கிடக்கின்றேன்!!

பசி வந்தால் பத்தும் பறந்து போகும்,
சொன்னவன் ஞானி, வாழ்பவள் வேசி!!

எத்தனை பேர் கூடினாலும்,
நான் வாக்கப்பட்டது என்னவோ வறுமைக்குத் தான்..

இருளோடு நான் தேவதையா!!
உலகோடு ஒரு தே______ ?! :(

'பற பற பறவை' பாடல் - எனது வரிகள்

நீர்பறவை படம் பார்த்து ஒரு வாரம் வரையிலும் அதை பற்றிய நினைவு மறையவில்லை. 'பற பற பறவை' பாடல் மிகவும் சுகமாய் இருந்தது. கிட்ட தட்ட இந்த ஒரு வாரத்தில் 50 முறை கேட்டு இருப்பேன். பேருந்துக்காக காத்திருந்த நேரத்தில், ஒரு நல்ல வரி தோன்றியது...அப்படியே இந்த கதை  களத்துக்கு ஏற்ப முழு பாடலும் எழுதலாம் என்று, நாலைந்து நாளாய், நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அருளப்பசாமியின் (கதை நாயகன்) பார்வையில் யோசித்து, எழுத முயற்சி செய்தேன்..அதன் விளைவு கீழே :)

இது ஒரு புது  தாயின் மடியா,  
மறுபடி என்ன  தொப்புள் கொடியா ,

உன் மார்பில் சாய மனம் துடிப் பதேன்?

எனதுயிர் என்ன அலையின் நுரையா,
உன் மணல் வந்த மழையின் துளியா,
உன்பார்வை தொட்டவுடன் கரைவதேன்?

மேகம் சூழ்ந்த என்வாழ்க்கைக்கு ஒற்றை நிலவு நீயடி 
போதை தேடுமென் கண்ணுக்கு நீயே பாதை மாற்றடி 

தண்ணீர்  மோதும் பாறை போல,
உன்னைத் தேடி கர கர வென கரையுது மனசு.....
                         ____________________
என் ஆலய தேவதை போலே, கண் முன் நீ  தோன்றியதாலே  ,
சிலுவைக்குள் சிக்கிக் கொள்ள துடிக்கிறேன், 

தரை வாழும் தவளை நானே, சிரகேற்றி பறக்க வைத்தாயே,
உன் தேசம் தேடி நானும்  தொலைகிறேன்..

வலையில் விழுகின்ற மீனுக்கு, உயிரும் சுமைவதை தானடி,
உனது வலையில் நான்  விழுந்த பின், தினமும் பிறக்கிறேன் ஏனடி?

தாயை தேடும் பிள்ளை போலே உன்னை தேடி கர கர வென  கரையுது  மனசு...
                                                                                                           ( இது ஒரு புது  ....)

                               __________________
கரை மீறும் படகை போலே, தரை மீது தவிகின்றேனே,
உன் காதல் கட்டி உள்ளே இழுத்திடு..

நிறம் இல்லா கடலும் நானே, பெருவான குடையும் நீயே,
உன் அன்பு நீலம் கொட்டி கொடுத்திடு,

தனித்து இருந்திடும் தீவுக்குள், வசிக்கும் பறவை நானடி,
உனது வானத்தில் இடம் கொடு,  உயர பறப்பேன் பாரடி
                                        (அல்லது)
உலகம் ஒதுக்கிட்ட பேயடி, நான் மதுவில் எரிகின்ற தீயடி,
கருணை நிறைந்த நீ தாயடி, என்னைதூஇமயாக்கிடும் உன் விழி,

தாயை தேடும் பிள்ளை போலே உன்னை தேடி கர கர வென  கரையுது  மனசு...
                                                                                                   ( இது ஒரு புது  ....)



ஞாயிறு, 13 ஜனவரி, 2013

N-Dimensional space - My blabbering


Came across this concept of 11-dimensional universe which the string theory predicts. eversince then have been wondering how can there be 11 dimentions when we can see only 3 of the spatial dimension, and can vaguely appreciate the fourth dimension of time. Wondering about it i can think of some two ways this is possible (possibilities that i can imagine), but have to read more to see what the science as we know talks about.

One possibility
Any N dimensional frame will have atleast one purely N-1 dimensional frame where the Nth dimension will hold a zero value. and there could be infinite apparent N-1 dimensionsinal frames where the Nth dimension have a constant value. For example lets take a 3-dimensional room with one of the corners as the absolute zero. Now if we take the wall adjacent to that corner, it can have values across its lenth and height but the breadth will be zero at all the points. So imagine an ant whose size is very close to zero. The ant moving on the wall will feel travelling on a two dimensional frame and cannot appreciate the third deminsion at all. And the room could be cut into infinite slices across its breadth, and each slice will be more like the wall except that the 3rd dimension is not zero but has a constant value. any observer who is limited to move across this slices cannot feel the third dimension at all. Similarly, we probably are in a 11 dimensional universe with 3 spacial dimensions that can have multiple values, one time dimension which also can hold multiple values (assuming going back in time is possible) and 7 other dimensions whose value are either constant or zero.

One another possibility
Another way i tend to see the n-dimension is to include a lot of non spacial dimensions. For example why not mass of an object is a dimension as every matter in the universe has got a mass (or atleast 0 mass :) ). Probably volume could be a dimension. So assuming mass as the fifth dimension say a jogger runs from a spacial co-ordinate (x1,y1,z1) at time t1 with a mass of m1, and loses some weight in the run while reaching co-orinate (x2,y2,z2) at time t2 where the mass becomes m2 we can define his movement even from the perspective of mass.

I dont know if the physicist already have some definition for the other dimensions. am still exploring. in any case, if anyone has a good idea of the actual N dimensions the theorists talk about please shed some light.Thanks.

சனி, 12 ஜனவரி, 2013

நீர்ப்பறவை

 இது சினிமா விமர்சனம் அல்ல. வழக்கம் போல் என்னை பாதித்த ஒரு நிகழ்வின் பதிப்பு. ஒரே சினிமாவில் இத்தனை முறை என் கண்கள் பணித்தது எப்போது என்று நினைவில் இல்லை. நான் பார்த்தது படத்தை அல்ல, மனிதர்களை, அனுபவங்களை. என் வாழ்வில் நான் காணாத, காண முடியுமா என்று அறியாத அனுபவங்களை. மனிதர்களை ரசிப்பது நல்ல ஒரு கவிதையின் சுகம். இந்த படத்தில் ஏனோ தெரியாது, ஆனால் நிறைய ரசித்தேன். குடிகாரனாய், போரில் ஒரு நிராயுதபாணியாய், அவமான காயங்களுடன் வாழும் ஒருவன், பிள்ளை குடிகாரனாய் இருந்தாலும் உயிருடன் இருக்க விரும்பும் தாய், பிள்ளையை அளவில்லாமல் நேசிக்கும் ஒரு தந்தை, தான் சாராயம் விற்றாலும் மகனிடம் "இங்கெல்லாம் வர கூடாது ராசா' என்று சொல்லும் ஒருத்தி, கடல்தான் மாதா- இதுல என்ன சாதி என்று கேட்கும் ஒருவன் என்று படம் முழுக்க மனிதர்கள்!!!! 5 நிமிடம் வரும் ஒரு மருத்துவர் கூட குடிகாரனாய் நிற்கும் நாயகனை பற்றி 'பரவாயில்லையே, பையன் கெட்டிகாரனா இருக்கானே' என்று பாசிடிவாய் பேசுகிறார். 

படத்தில் நிறைய வசனங்கள் இல்லை, அனால் நிறைய நல்ல வசனங்கள்.       " மேரி மாதா கோவிலில் பொம்பள பேசாம யாரும் பேசுவா", " இந்த நாட்டுல மீனவன் எல்லாம் அநாதைங்க தான்", "உன்னோட  புருஷன் செத்தத அரசாங்கத்துகிட்ட சொல்லனும்ன்ல " என்று நீதிபதி கேட்கும் போது "சொல்லி இருந்த என்ன பண்ணி இருப்பேங்க?" என்று நாயகி சொல்வது, "அவுங்க சுட்டாங்க, ஆனா நான்தான் கொன்னேன்", "அவரு உடம்புதான் இங்க வந்துச்சு, உசுரு? ".. ஐயோ, இது அத்தனையும் மனதை அறுத்த வசனங்கள். படத்தில் முக்கிய வேடங்கள் தாங்கி நடித்த நாயகன், நாயகி, அப்பா, அம்மா நால்வரும் மட்டும் இன்றி, படத்தில் மிகவும் குறைவாய் வரும் டாக்டர், படகு செய்து தரும் பாய் , சாராயம் விற்கும் கிழவி, உப்பள சொந்தக்காரரின் தங்கை என்று அனைவரும் நெஞ்சை வருடுகிறார்கள்.

பிழைப்பிற்காக சாராயம் விற்கும் எபனேசர் தன் மகன் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனயில் இருக்கும் பொழுது நாயகனின் கைகளில் முத்தம் குடுக்கும் தருணம், குடிகார பிள்ளையை பெல்டால் துரத்தி துரத்தி அடிக்கும் அப்பா, அதே பிள்ளை குணமாகி வரும் போது முகத்தில் அதிகம் அலட்டி கொள்ளாமல் ஒரு பெரிய மீனை எடுத்து சென்று மருத்துவரின் முன்னால் வைத்து கை எடுத்து கும்பிடும் போதும், பிறகு படகு செய்யும் பாய் இடம் தன மகனுக்கு உதவ சொல்லி கேட்பதும், நானும் வல்லம் வாங்கி எங்க அப்பன் லூர்து சாமி பேர  போட்டு ஓட்டுவேன் என்று சொல்லும் மகனை  அழாத ஆம்பிளையாய்  பார்க்கும் நேரத்திலும், பிறகு அதே வல்லத்தில் தனது பெயரை தடவி பார்க்கும் பொழுதில், கடைசியாய் மகனின் சவத்தின் முன் அழும் பொழுதும் அந்த அப்பா என்னை அதிகமாகவே பாதித்து விட்டார். உண்மையில் சொன்னால் இந்த படத்தில் என்னை அதிகமாய் அழ வைத்தவர் அவரும், அவரின் உணர்சிக்கு உதவியாய் நின்ற இசை அமைப்பாளரும் தான். மகனுக்கு சரக்கு வாங்க காசு தரும் அம்மா வேடம் புதிதல்ல, அனால் எந்த பழக்கத்தையும் உடனே நிறுத்துவது ஆபத்தாகி விடுமோ என்ற பயத்தில் காசு  குடுப்பதில் மிகவும் யதார்த்தம். மேரியாய் வரும் நாயகனின் அம்மா பல இடங்களில் மனதில் அழகை நிற்கிறார். 

படம் முழுக்க என்னால் நடிகர்ளை பார்க்கவே முடியவில்லை. நான் பார்த்தது எல்லாம் அருளப்பசாமியும், எஸ்தரும், லூர்து சாமியும், மேரியும்  மற்ற மனிதர்களும் தான். பர பர பறவை பாடல் உள்ளத்தை அரித்துக்கொண்டே இருக்கிறது. எனக்கு கூட அழுவது பிடிக்காது, ஆனால் இந்த பாடலில் உருகாமல் இருக்க முடியவில்லை. நிறைய சொல்லதோன்றுகிறது , அனால் உணர்வுகளை வார்த்தைக்குள் கட்டி வைக்க முடியவில்லை. படம் பார்த்து முடித்த போது நான் உணர்ந்தது, கல்லூரி படிக்கும் போது வைரமுத்துவின் "ஒரு போர்க்களமும் இரு பூக்களும்" புத்தகம் படித்து முடித்த போது இருந்தது போலவே இருந்தது.(அப்போது இரண்டு நாள் ஒரு மாதிரியாகவே இருந்தேன், இந்த பதிப்பை முடித்த பிறகு என் மனம் கொஞ்சம் லேசாகும் என்று நம்புகிறேன் ).  இத்தனை அழகான ஒரு காவியத்தை கொடுத்த திரைக்கதையாளருக்கும் இயக்குனருக்கும் நன்றி. நீர்ப்பறவை - ஆழமான கடல், அழகான பறவை.

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...