சனி, 27 ஜூன், 2020

யாருப்பா அது கடவுளா




முட்டாள், நல்ல சான்ஸ விட்டுட்டியே, திரும்ப கிடைக்குமா? கடவுள சுத்தி வரவனுக்கு பிரசாதம் தான் கெடைக்கும், நேத்து திடு திப்புனு அந்த கடவுளே கண்ணு முன்னாடி வந்து நின்னானே, வந்து என்ன காசா கேட்டான், கொஞ்சம் ரெஸ்ட் வேணும், யாரும் கொஞ்ச நாளுக்கு பிரார்த்தன பண்ண வேணாம்னு மக்கள் கிட்ட தூதனா போய் சொல்லு னு சொன்னான், நான் முட்டாள் மாதிரி லீவ், லாஸ் ஆஃப் பே எல்லாம் யோசிச்சு முடிக்கிற முன்னாடி காணா போய்ட்டான். தூதனா போறேன், இத குடு அத குடு னு கேட்டு தொலைக்க தோணாம போச்சு, நைட் எல்லாம் உக்காந்து லிஸ்ட் போட்டு வச்சிருக்கேன், இனி எப்போ கடவுள் வந்தாலும் ஒழுங்கா டீல முடிக்கணும் னு நெனச்சுட்டு கடவுள சுத்தி வந்தேன், என்ன ஆச்சர்யம் கடவுள் ஹாயா உக்காந்துட்டு இருந்தாரு, கை கட்டி பவ்யமா கடவுளே நான் தூதனா போறேன் னு சொன்னேன், அவர் கல கல னு சிரிச்சாரு, தெய்வீக சிரிப்பு, சிரிச்சுப்புட்டு என் தலைல ஒரு இடிய போட்டு உடைச்சாரு, உடைச்சாரு என்ன உடைச்சாரு, உடைச்சான்..நான் லிஸ்ட் தான் போட்டேன், எவனோ மூளக்காரன் கடவுள் வேலைக்கே அப்ளிகேஷன் போட்டு கடவுளுக்கு ரெஸ்ட் குடுத்துட்டான். இந்தாளு இப்ப கடவுளே இல்ல, இவன சுத்தி என்ன பிரயோஜனம், போயான்னு வெளில வந்துட்டேன், இனி அந்த புது கடவுள எங்க போய் தேடுவேன்!

X அழகி

அவளை இத்தனை வருடம் கழித்து இப்படி பார்ப்பேன் என்று தெரியாது, கல்லூரியில் தேவதை போல் பார்த்தவள், ஒரு காலத்தில் என் மனதுக்குள் வாழ்ந்தவள்,  இன்று கடையில் பில் போட்டுக் கொண்டிருந்தாள், கண் முன் ஒரு நிமிடம் 'அழகி' பட நந்திதா தாஸ் வந்து போக,'உன் குத்தமா என் குத்தமா' என்று பார்த்திபன் போல் மனதுக்குள் பாடிக்கொண்டே,  எப்படியாவது அவளுக்கு உதவ வேண்டும் என்று இரவு பத்து மணிக்கு அவள்  வெளியே வரும் வரை காத்திருந்து அவளுக்கு உதவிக்கரம் நீட்டினேன், நல்ல வேளை, பக்கத்திலேயே 24 மணி நேர மருத்துவமணை இருந்தது, உணர்ச்சி வசத்தில் அவள் சூரியவம்சம் தேவயானி என்பதை கவனிக்காமல் விட்டுவிட்டேன், அவனும் சரத்குமார் மாதிரியே பல்கியாகத்தான் இருந்தான், இருந்தாலும் உதவிக்கரத்தை அவன் இப்படி உடைத்திருக்க கூடாது...

தேசபக்தி



தேசபக்தர் 1 - 'என்னங்க 20 ஜவான்கள கொன்றுக்கானுங்க, உள்ள விட்டு எல்லாரையும் காலி பண்ண வேணாம், இந்தியா என்ன சலச்சதா',
 தேசபக்தர் 2 - 'அப்படியெல்லாம் விடமாட்டாங்க, வேணா பாருங்க பதிலடிய',

1- 'நானும் அப்டி தான் நெனைக்கிறேன், இந்தியா னா யாருன்னு காட்டனுங்க'
2- 'ஆமாங்க, சரி, டாக்ஸ் கொஞ்சம் கம்மி பண்ணணும்னு சொன்னீங்களே, என்ன பண்ணீங்க'
1- 'வீடு வைஃப் பேர்லதான் இருக்கு, அவுங்களுக்கு ரென்ட் கட்ற மாதிரி ரெசிப்ட் போட்டாச்சுல, உங்க தம்பி லைசன்ஸ் என்னாச்சு?'
2- 'அதெல்லாம் குடுக்குறத குடுத்தா வந்துட்டு போவுது'

யந்திரமானேன்


'எப்ப வேனா தூங்கலாம், இப்பதான் உழைக்கிற வயசு, இப்பதான் சம்பாதிக்க முடியும், இப்ப கம்மியா தூங்கினா பரவா இல்ல' ஓடி ஓடி 25 ஆண்டுகள் ஓடிய பின், 'நைட் சரியா தூக்கமே வர மாட்டேங்குது டாக்டர், என்னேன்வோ செஞ்சு பாத்தாச்சு...'

சாகாது வாழும் சாதி



'இந்த நாட்டிற்கு வந்த நாளில் இருந்து இந்த நிறபேத இனவாதத்தை பார்த்திருக்கிறேன், அனுபவித்திருக்கிறேன்,  வளர்ந்த நாடான இங்கு கூட, இந்த காலத்திலும் இனவாத மூடர்கள் இருக்கிறார்கள், குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் எப்போது புரியும் இவர்களுக்கு', கோபத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு கொண்டிருக்கும் போதே ஊரில் இருந்து பெரியப்பா வாட்சாப்பில் அழைத்தார், 'பேசாதீங்க பெரியப்பா, அவன வெட்டி போட்ருக்க வேணாம் நீங்க, அந்த ஈன ___ சாதிப் புள்ளய கல்யாணம் பண்ணியிருக்கான் ராஸ்கல்'.....

கதவை திற காதல் வரட்டும்



கடந்த இரண்டு மாதங்களாக இதுவே வழக்கமாக மாறி இருந்தது,ரோட்டோரமாய் வளர்ந்திருந்த  இந்த சின்ன மரத்தின் கீழ்தான் அவனை முதல் முதல் சந்தித்தது, இங்குதான் காதல் சொன்னது, கூட்டம் மறைந்த அந்த அரை நிமிடத்தில் ஒரு முத்தம் கொடுத்தானே, அதுவும் இங்குதான், அன்றெல்லாம் இமை மூடாமல் மயங்கிக் கிடந்தேன், ஒரு நாள் ஊர் மாறிப்போகும் முன் இதே மரத்தடியில் என் மனமுடைந்து விட்டு போனான், அன்று கோபத்தில் ஒரு இலை பிடுங்கி கசக்கி எறிந்தேன், அன்று முதல் இதை கடக்கும் போதெல்லாம், எவனோ செய்த தவறுக்கு வெரும் சாட்சியாய் நின்ற இந்த மரத்தின் இலை பறித்து அதை தண்டித்துக் கொண்டிருந்தேன், ஆனால் பறிக்க பறிக்க எப்படி இலைகள் துளிர்க்கின்றன தெரியவில்லை.. 'எக்ஸ்க்யூஸ் மி', திரும்பினேன், சூப்பர் மேன் மாதிரி இல்லாமல் சுமாராக நின்றிருந்த அவனைப் ஏறிறங்கப் பார்த்தேன், ' சாரிங்க, நன் ஆஃப் மை பிசினஸ், ஆனா நெறைய டைம் உங்கள இந்த மரம் கீழ பாத்திருக்கேன், எல பறிக்கும் போது அதுக்கு வலிக்குமா தெரியல, ஆனா காரணமே இல்லாம  அதோட எலைய பறிக்கிறது சரி இல்லன்னு தோனுது', பதட்டமில்லாமல் கண்ணில் கருணை கொஞ்ச பேசியவன் இப்போது சுமாரிலிருந்து சூப்பராகவே தெரிந்தான், உதிர்ந்த பின்னும் இலைகள் அழகாக எப்படியோ துளிர்க்கின்றன.....

கொலையும் செய்வாள்



செக் லிஸ்ட்டை ஒரு முறை மனதுக்குள் சரிபார்த்துக் கொண்டேன், 1. காதலன் அனுப்பியது போன்று அவள் இன்பாக்ஸில்    மெயில்கள் - செக், 2. அதை அவள் படித்து பதில் அனுப்பியது போல்  நானே அவள் மெயிலில் இருந்து அனுப்பிய பதில் மெயில்கள் - செக், 3. ஓடிப்போனது போல செட் செய்ய பேஃக் செய்த நகை, ட்ரஸ் - செக் 4. அவசர தேவை என்று அவளையே  பாங்கில் இருந்து எடுத்து வர சொன்ன ரெண்டு லட்சம் - செக், 5. நகை, பணம் பதுக்கி வைக்க தனிப் பை - செக், அவள் உடம்பை மறைக்க ஒதுக்குபுறமான இடம் - செக், இன்று நான் மதுரைக்கு போக எடுத்து வைத்த லேட் நைட் பஸ் டிக்கெட் - செக் , முக்கியமான ஐடம், என் கல்லூரி லேப்பில் இருந்து யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்த சையனைட் - செக், எல்லாம் ரெடி , இனி மர்டர், பாடி டிஸ்போஸல், மதுரை ட்ராவல், பணம் நகை அங்கே மறைத்தல், 2 நாளாக மனைவி காணவில்லை என்ற கண்ணீர், போலிஸ் கம்ப்ளெயின்ட், மெயில் ஆதாரம் அவளை ஓடுகாலியாக காட்டுவது எல்லாம் பெர்பக்ட் என்று யோசிக்கும் போதே உள்ளே வந்தவள் , 'ஏங்க, பேங்க்ல என்  ஃப்ரண்ட் சசி ஃபோன் பண்ணா, இன்னைக்கு ஏதோ அங்க பெரிய ப்ரச்சனையாம், பணத்த திரும்ப எண்ணிப் பாத்துக்க சொன்னா' என்று அனத்த, பாவம்  கடைசி ஆசையை செய்து தொலைக்கலாம் என்று பணத்தை  எண்ணி வைக்கும் போது கண்கள் மங்கின, அவள் பேசத் தொடங்கினாள், ' எல்லாம் ஓ.கே தான,  நக்கி நக்கி எண்ணியே,அதுல ஒரே நோட்ல ஒரே ட்ராப் தாம்பா வெச்சேன் ஒன் சையனைட', எனக்கு மாரில் வலி இறங்கியது, 'நீ செத்ததும் போலிஸ் வரும், லேப்ல இருந்து சையனைட் திருட்னத கண்டுபிடிக்கும், அப்புறம் நான் அடிக்கடி செக் பண்ணாத என் மெயில புத்திசாலித்தனமா யூஸ் பண்ணியே, அதுல அட்லீஸ்ட் ரெண்டு தடவ நீ ரெஸ்பான்ட் பண்ண டைம்ல நான் பக்கத்துல சீசீடீவி இருக்குற சூப்பர் மார்க்கெட் ல இருந்தேன், நான் அத அணுப்பலன்னு ப்ரூவ் பண்ணிடலாம்,  அதுக்கப்புறம் இதெல்லாம் உன் வேலைன்னு கண்டுபுடிக்கிறது  அவ்ளோ கஷ்டம் இல்ல, என்ன கொஞ்சம் விசாரிப்பாங்க ,  சமாளிச்சிடுவேன், எப்டியுப்  உன் வேணி கூட நீ ஜாலியா ஊட்டில எடுத்தயே செல்ஃபி, அத சைலன்டா ரிலீஸ் பண்ணுவேன், அது போதும்,  நீ என்ன கொல்ல ப்ளான் பண்ணி, அதுக்குள்ள ஆக்ஸிடென்டலா ஒரு ட்ராப் எப்படியோ  கன்ச்யூம் பண்ணி செத்துட்டன்னு கேஸ முடிக்க',  அவள் சொல்வது புத்தி வரை போக தடுமாறின, தலையில் ஐந்து டண் பாரம், மூச்சு திணறியது, 'செக் மேட் மச்சி', உடலெல்லாம் வலி பரவ கண்கள் மூடிக் தொடங்கின....

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...