சனி, 27 ஜூன், 2020

அன்பிற்கும் உண்டோ


இவன வளத்தது பத்தாது னு இந்த நாய கொண்டு வந்து விட்டுட்டு ஹாஸ்டல் போய்ட்டான், இத வாசல் தாண்டி உள்ள எல்லாம் விட மாட்டேன், சனியன் ஏதாச்சும் பண்ணினா யாரு வீட்ட சுத்தம் பண்ணிட்டே இருக்கது, வேளா வேளைக்கு சோறு போட்டு தொலைக்கிறேன் என்று வாசலிலேயே கட்டிப் போட்டு விட்டேன்.ஒரு வாரம் ஆகிடுச்சு, சோத்த தின்னுட்டு அது பாட்டுக்கு கெடந்துச்சு, இன்னைக்கு கொஞ்சம் மேலுக்கு முடியல, அதோட எதையோ சமச்சு அதுக்கு வச்சுட்டு அப்டியே அசந்து வாசல்ல உக்காந்துட்டேன், எப்பவும் வெடுக்கு வெடுக்குனு முழுங்குற நாயி இன்னைக்கு திங்காம என்னையே பாத்துட்டு இருந்துச்சு, மெல்ல பக்கத்துல வந்து என் மடில அப்டியும் இப்டியும் மூஞ்சிய முட்டிகிட்டு, ஏதோ என் வேதன புரிஞ்சா மாதிரி என் பக்கத்துல உக்காந்து என்னவே  உத்து பாத்துச்சு,  கருணை னு சொல்லுவாங்களே, அந்த மாதிரி,எனக்கு உள்ளுக்குள்ள என்னென்னவோ பண்ணுச்சு, அப்பா அம்மா ஞாபகம்  எல்லாம் வந்துடுச்சு, மெல்ல அதோட கயித்த அவுத்து விட்டேன், நான் எழுந்து உள்ள போக என் முந்தானைய புடிச்சிட்டடே ஒரு சின்ன உசுரு வீட்டுக்குள்ள வந்துச்சு...

நான் பெண்



கைப்பை,திறன்பேசி எல்லாம் பாலித்தீன் கவரில் போட்டுவிட்டு, மழையில் நனைந்து கொண்டே நடந்தேன், எவ்வளவு சுகம், மழையில் நனையாதே என்று அம்மா சொன்னதை மீறி நனைந்ததே முதல் விதிமீறல், எனக்கென்னவோ மழையில் நனையாதே என்று சொல்வது தான் விதிமீறலாய் தெரிந்தது. பரிட்சைக்கு படி என்றார்கள், பிடித்ததை படித்தேன்..இழுத்து மூடு என்றார்கள், கண்ணை மூடிக்கொள் என்றேன்..ஒருவனே கற்பென்றார்கள், பரிணாம வளர்ச்சி படி என்றேன்..புல்லானாலும் புருஷன் என்றார்கள், புல்லை வெளியே வை என்றேன்.. வாழாவெட்டி ஆவாய் என்றார்கள், வாழ்வை வெட்டியாய் ஆக்க விருப்பமில்லை என்றேன்.. துணையில்லாமல் வாழ முடியாது என்றார்கள், துணை தான் தேவை தலைவன் இல்லை என்றேன்.. திமிர் பிடித்தவள் தனியாக தான் இருக்க போகிறாய் என்றார்கள், இல்லை, இங்கே ஆண்கள் இன்னும் இருக்கிறார்கள், பெண்ணை சக மனுஷியாய் பார்க்கும் ஆண்கள் நிறைய இருக்கிறார்கள், அப்படி ஒருவனோடு வாழ்கிறேன், அப்படி ஒருவனை ஈன்றிருக்கிறேன், எனக்கான மழைத்துளிகளை எவரும் எனக்கு சொல்வதில்லை, எனக்கு தேவை இல்லாத குடைகளை எவரும் எனக்கு பிடிப்பதில்லை, விதிமீறல்களை மீறிக்கொண்டு என் ஆடை நனைத்த ஒவ்வொரு துளியையும் எண்ணிப் பார்த்து கொண்டே நடந்தேன்....

யாருப்பா அது கடவுளா




முட்டாள், நல்ல சான்ஸ விட்டுட்டியே, திரும்ப கிடைக்குமா? கடவுள சுத்தி வரவனுக்கு பிரசாதம் தான் கெடைக்கும், நேத்து திடு திப்புனு அந்த கடவுளே கண்ணு முன்னாடி வந்து நின்னானே, வந்து என்ன காசா கேட்டான், கொஞ்சம் ரெஸ்ட் வேணும், யாரும் கொஞ்ச நாளுக்கு பிரார்த்தன பண்ண வேணாம்னு மக்கள் கிட்ட தூதனா போய் சொல்லு னு சொன்னான், நான் முட்டாள் மாதிரி லீவ், லாஸ் ஆஃப் பே எல்லாம் யோசிச்சு முடிக்கிற முன்னாடி காணா போய்ட்டான். தூதனா போறேன், இத குடு அத குடு னு கேட்டு தொலைக்க தோணாம போச்சு, நைட் எல்லாம் உக்காந்து லிஸ்ட் போட்டு வச்சிருக்கேன், இனி எப்போ கடவுள் வந்தாலும் ஒழுங்கா டீல முடிக்கணும் னு நெனச்சுட்டு கடவுள சுத்தி வந்தேன், என்ன ஆச்சர்யம் கடவுள் ஹாயா உக்காந்துட்டு இருந்தாரு, கை கட்டி பவ்யமா கடவுளே நான் தூதனா போறேன் னு சொன்னேன், அவர் கல கல னு சிரிச்சாரு, தெய்வீக சிரிப்பு, சிரிச்சுப்புட்டு என் தலைல ஒரு இடிய போட்டு உடைச்சாரு, உடைச்சாரு என்ன உடைச்சாரு, உடைச்சான்..நான் லிஸ்ட் தான் போட்டேன், எவனோ மூளக்காரன் கடவுள் வேலைக்கே அப்ளிகேஷன் போட்டு கடவுளுக்கு ரெஸ்ட் குடுத்துட்டான். இந்தாளு இப்ப கடவுளே இல்ல, இவன சுத்தி என்ன பிரயோஜனம், போயான்னு வெளில வந்துட்டேன், இனி அந்த புது கடவுள எங்க போய் தேடுவேன்!

X அழகி

அவளை இத்தனை வருடம் கழித்து இப்படி பார்ப்பேன் என்று தெரியாது, கல்லூரியில் தேவதை போல் பார்த்தவள், ஒரு காலத்தில் என் மனதுக்குள் வாழ்ந்தவள்,  இன்று கடையில் பில் போட்டுக் கொண்டிருந்தாள், கண் முன் ஒரு நிமிடம் 'அழகி' பட நந்திதா தாஸ் வந்து போக,'உன் குத்தமா என் குத்தமா' என்று பார்த்திபன் போல் மனதுக்குள் பாடிக்கொண்டே,  எப்படியாவது அவளுக்கு உதவ வேண்டும் என்று இரவு பத்து மணிக்கு அவள்  வெளியே வரும் வரை காத்திருந்து அவளுக்கு உதவிக்கரம் நீட்டினேன், நல்ல வேளை, பக்கத்திலேயே 24 மணி நேர மருத்துவமணை இருந்தது, உணர்ச்சி வசத்தில் அவள் சூரியவம்சம் தேவயானி என்பதை கவனிக்காமல் விட்டுவிட்டேன், அவனும் சரத்குமார் மாதிரியே பல்கியாகத்தான் இருந்தான், இருந்தாலும் உதவிக்கரத்தை அவன் இப்படி உடைத்திருக்க கூடாது...

தேசபக்தி



தேசபக்தர் 1 - 'என்னங்க 20 ஜவான்கள கொன்றுக்கானுங்க, உள்ள விட்டு எல்லாரையும் காலி பண்ண வேணாம், இந்தியா என்ன சலச்சதா',
 தேசபக்தர் 2 - 'அப்படியெல்லாம் விடமாட்டாங்க, வேணா பாருங்க பதிலடிய',

1- 'நானும் அப்டி தான் நெனைக்கிறேன், இந்தியா னா யாருன்னு காட்டனுங்க'
2- 'ஆமாங்க, சரி, டாக்ஸ் கொஞ்சம் கம்மி பண்ணணும்னு சொன்னீங்களே, என்ன பண்ணீங்க'
1- 'வீடு வைஃப் பேர்லதான் இருக்கு, அவுங்களுக்கு ரென்ட் கட்ற மாதிரி ரெசிப்ட் போட்டாச்சுல, உங்க தம்பி லைசன்ஸ் என்னாச்சு?'
2- 'அதெல்லாம் குடுக்குறத குடுத்தா வந்துட்டு போவுது'

யந்திரமானேன்


'எப்ப வேனா தூங்கலாம், இப்பதான் உழைக்கிற வயசு, இப்பதான் சம்பாதிக்க முடியும், இப்ப கம்மியா தூங்கினா பரவா இல்ல' ஓடி ஓடி 25 ஆண்டுகள் ஓடிய பின், 'நைட் சரியா தூக்கமே வர மாட்டேங்குது டாக்டர், என்னேன்வோ செஞ்சு பாத்தாச்சு...'

சாகாது வாழும் சாதி



'இந்த நாட்டிற்கு வந்த நாளில் இருந்து இந்த நிறபேத இனவாதத்தை பார்த்திருக்கிறேன், அனுபவித்திருக்கிறேன்,  வளர்ந்த நாடான இங்கு கூட, இந்த காலத்திலும் இனவாத மூடர்கள் இருக்கிறார்கள், குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் எப்போது புரியும் இவர்களுக்கு', கோபத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு கொண்டிருக்கும் போதே ஊரில் இருந்து பெரியப்பா வாட்சாப்பில் அழைத்தார், 'பேசாதீங்க பெரியப்பா, அவன வெட்டி போட்ருக்க வேணாம் நீங்க, அந்த ஈன ___ சாதிப் புள்ளய கல்யாணம் பண்ணியிருக்கான் ராஸ்கல்'.....

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...